கோடம்பாக்கம் - மாம்பலம் இடையே உயர் மின் அழுத்த கம்பி அறுந்தது!

கோடம்பாக்கம் - மாம்பலம் இடையே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்கப்பட்டது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 24, 2018, 11:21 AM IST
கோடம்பாக்கம் - மாம்பலம் இடையே உயர் மின் அழுத்த கம்பி அறுந்தது! title=

கோடம்பாக்கம் - மாம்பலம் இடையே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்கப்பட்டது.

சென்னையில் கோடம்பாக்கம் முதல் மாம்பலம் இடையே புறநகர் ரயில்கள் இயக்கப்படும் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளது.  இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே நிர்வாக ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் புறநகர் ரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. குறைவான ரயில்களே இயக்கப்படுவதால் அனைத்து ரயில்நிலையங்களிலும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Trending News