சென்னை காவல்துறை ஆணையராக கரன்சின்ஹா நியமனம்

சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அவர்களுக்கு பதிலாக கூடுதல் டிஜிபி-யாக இருந்த கரன்சின்ஹா புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Last Updated : Mar 25, 2017, 11:36 AM IST
சென்னை காவல்துறை ஆணையராக கரன்சின்ஹா நியமனம் title=

சென்னை: சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அவர்களுக்கு பதிலாக கூடுதல் டிஜிபி-யாக இருந்த கரன்சின்ஹா புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி.,யாக இருக்கும் கரண்சின்காவை, சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும், அதனை தொடர்ந்து 2016-ம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போதும் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் இருந்தார். மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் இருந்தால் தேர்தல் முறையாக நடைபெறாது முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றதை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலின் போதும் சட்டப்பேரவை தேர்தலின் போதும் ஜார்ஜ் மாற்றப்பட்டார். 

தற்போது மாற்றப்பட்டு இடத்திற்கு சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.ஜி.பி யாக இருந்த கரன்சின்ஹா தற்போது சென்னை காவல்துறை ஆணையராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Trending News