தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக திட்டம்; எச்சரிக்கும் கி.வீரமணி

தமிழகத்தில் அரசியல் ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவினர் திட்டமிட்டு வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 6, 2022, 03:39 PM IST
  • சென்னையில் திராவிடர் கழக தலைவர் பேட்டி
  • பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டு
  • பெரியார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டம்
தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக திட்டம்; எச்சரிக்கும் கி.வீரமணி title=

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி வீரமணி தலைமையில் திராவிடர் கழக தலைமை கூட்டம் நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் உள்பட சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, " தந்தை பெரியார் 144-வது ஆண்டு பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று  சிறப்பாக கொண்டாடப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெரும் கொள்கை பிரச்சார விழாவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம். 

பெரம்பலூர் மாவட்டம் சிறுகனூரில் 'பெரியார் உலகம்' ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. அங்கு சுமார் 150 அடி உயர பெரியார் சிலையை அமைப்பதற்கான பணியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்க உள்ளார். ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட மதவாதிகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிராக செயல்படக்கூடிய சிறந்த தலைவராக காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி இருக்கிறார். திராவிடர் கழக சித்தாந்தம் பாஜக சித்தாந்தம் நேர் எதிர் சித்தாந்தம். திராவிடர் கழகத்திற்கு எதிராக செயல்படக்கூடிய துணிவு பாஜகவிற்கு இல்லை.

மேலும் படிக்க |பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கடலில் வீசி கொலை

 அவர்கள் அரசியல் ரீதியாக திராவிட மாடல் ஆட்சியை தாக்கி அரசியல் செய்து வருகின்றனர். பாஜக தலைவரான அண்ணாமலை அடித்தால் திருப்பி அடிப்பேன் என ஊடகவியலாளரிடம் அளித்த பேட்டியின் மூலம் அவரது தரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. அவர் தலைவர் பகுதிக்கு தகுதியானவரா?. சட்டத்தை கையில் எடுத்து தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம்  பெற வேண்டும் என அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். 

அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தமிழக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும். ஆதி திராவிடர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் காணக்கூடிய வகையில் இருக்கக்கூடிய சலுகைகளை பறிப்பதற்கான சூழ்ச்சிகள் அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை பாதுகாக்க சட்டரீதியாக தொடர்ந்து செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | சேலம்; சில்மிஷ இயக்குநரை சிறையில் அடைத்த காவல்துறை; இளம் பெண்கள் சரமாரி புகார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News