மெட்ரோ சேவை ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்

Last Updated : Sep 20, 2016, 05:15 PM IST
மெட்ரோ சேவை ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் title=

சென்னையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன. அங்கு கடந்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சின்ன மலை - விமான நிலையம் இடையே  மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கினார். 

இதையடுத்து சின்னமலை-விமான நிலையம் இடையே நாளை  முதல் மெட்ரோ  ரெயில் சேவை தொடங்குகிறது. இதற்கான விழா தலைமைச்செயலகத்திலும், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்திலும் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம்  சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையைத் தொடங்கி வைப்பார். 

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் விழாவுக்கு முன்னிலை வகிப்பார்கள். 

மெட்ரோ  ரெயிலுக்கான கட்டணம்:-

  முதல் 2 கி.மீ  -  ரூ.10

2 முதல் 4 கி.மீ  - ரூ.20 

4 முதல் 6 கி.மீ.  - ரூ.30 

6 முதல் 8 கி.மீ  -  ரூ.40 

8 முதல் 10 கி.மீ -  ரூ.5௦ 

10 முதல் 15 கி.மீ-  ரூ.60.

 

 

Trending News