ஜல்லிக்கட்டு: வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

Last Updated : Jan 18, 2017, 12:13 PM IST
ஜல்லிக்கட்டு: வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் title=

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக முழுவதுமான கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகம் முழு வதும் மாணவர்கள், இளை ஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  தமிழ்நாடு முழு வதும் மாணவர்கள், இளை ஞர்கள் இடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் மாணவர்கள் அயராமல் அமர்ந்து போராடுகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மதுரையில் அலங்காநல்லூரில் போராட்டம் வலுவடைந்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக் இன்று கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புக்களை புறக்கணித்து விட்டு ஒன்று கூடி போராடி வருகின்றனர்.

Trending News