ஆர்.கே.நகருக்குள் முன் அனுமதியின்றி வாகனம் செல்ல தடை!

ஆர். கே. நகர் தொகுதியில் முன் அனுமதி பெறாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம்  உத்தரவு.

Last Updated : Dec 10, 2017, 11:12 AM IST
ஆர்.கே.நகருக்குள் முன் அனுமதியின்றி வாகனம் செல்ல தடை!  title=

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதை தொடர்ந்து பல அறிக்கைகளை தேர்தல ஆணையம் தெரிவித்து வருகிறது. 

இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் முன் அனுமதி பெறாமல் வரும் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இன்று இரவில் இருந்து இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன் அனுமதி அட்டை இல்லாத வாகனத்தை கண்காணிக்காமல்  தொகுதிக்குள் அனுமதித்தால் அதில் சம்மந்தப்பட்ட பறக்கும் படையில் உள்ள காவல் துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர்களை சஸ்பென்ட் செய்யுமாறு உத்தரவு தெரிவித்துள்ளது.

பிரசாரத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் தொகுதியில் உள்ள வாகனங்கள் அனுமதி அட்டை பெற ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தாகவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் ஆர்.கே.நகருக்குள் வந்த வெளியூரை சேர்ந்த 12-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Trending News