ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் ஒப்புதலுடன் தொடங்கும் -தர்மேந்திர பிரதான்

Last Updated : Mar 28, 2017, 11:37 AM IST
ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் ஒப்புதலுடன் தொடங்கும் -தர்மேந்திர பிரதான்  title=

நெடுவாசல், காரைக்கால் உட்பட நிலப்பகுதியில் 23, கடல் பகுதியில் 8 என 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்ததாரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் தர்மேந்திர பிரதான். பிறகு அவர்களுக்கு அரசு அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கும் எனவும் உறுதி அளித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:-

நெடுவாசலில் பணி தொடங்குவதற்கு முன், தமிழக முதல்வர் மற்றும் நெடுவாசல் மக்களிடம் கலந்து பேசுவோம். நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிப்போம். இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட மக்களுடன் ஆலோசனை மற்றும் விவாதம் நடத்தாமல் எந்தப் பணியும் தொடங்கப்படாது. மேலும் அதிகாரிகள் நெடுவாசலுக்கு சென்று மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

Trending News