கின்னஸ் சாதனையாளரின் விபரீத முடிவு! அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Last Updated : Oct 27, 2018, 08:58 AM IST
கின்னஸ் சாதனையாளரின் விபரீத முடிவு! அதிர்ச்சி சம்பவம்! title=

திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

திருப்பூரை அடுத்துள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (27). கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27- ம் தேதி இவர் தனது விரல் நகத்தை துளையிட்டு, 22.5 கிலோ எடையுள்ள பொருளைத் தூக்கிக் காட்டி திருப்பூரில் கின்னஸ் சாதனையை நிகழ்த்திக் காட்டினார். அதையடுத்து அவரது அந்தச் சாதனையானது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தது. 

இவர் 11 மாதங்களுக்கு முன்னர் நல்லூரில் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி இன்னும் ஒருவருடம்கூட நிறைவடையாத நிலையில், ஹேமச்சந்திரன், திடீரென நல்லூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Trending News