தமிழகத்தில் மளிகை கடைகள் இனி மதியம் 2.30 வரை மட்டுமே செயல்படும்...

காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Last Updated : Mar 27, 2020, 08:55 PM IST
தமிழகத்தில் மளிகை கடைகள் இனி மதியம் 2.30 வரை மட்டுமே செயல்படும்... title=

காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., கொரானா பரவலை தடுக்கும் முயற்சியில் இனி காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும்

அதேவேளையில் மருந்தகங்கள், உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கலாம். ஆனால் Swiggy, Zomato, Uber போன்ற நிறுவனங்கள் உணவு விநியோகிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன்படி காலை உணவு வழங்க 7.00am - 9.30am, மதிய உணவு வழங்க 12.00pm - 02.30pm மற்றும் இரவு உணவிற்கு 06pm-9.00pm வரை அனுமதிக்கப்படும். 

மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கையாக, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தவகையில் கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி சந்தைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும். மேலும், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே  செயல்படும்.

இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்., தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது;  கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே. 144 தடை உத்தரவு மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கே; 144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News