பஞ்சரான லாரி மீது அரசு பஸ் மோதியதில் 6 பேர் பலி 10 பேர் காயம்

Last Updated : May 5, 2017, 10:56 AM IST
பஞ்சரான லாரி மீது அரசு பஸ் மோதியதில் 6 பேர் பலி 10 பேர் காயம் title=

இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. சின்னாளபட்டி அருகில் உள்ள அமலிநகர் என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் நின்றிருந்த பஞ்சரான லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. 

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அந்த பஸ்சில் சுமார் 5௦ பயணிகள் இருந்ததாக தெரிகிறது. 

அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செல்லும் வழியில் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம் குறித்து சின்னாளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News