கிசுகிசு : மாஜிக்கள் மனம்மாற தொடங்கியிருப்பதால் கோபத்தில் இருக்கும் சேலத்துக்காரர்

Gossip : இலை கட்சிக்குள் மீண்டும் ஒரு கலகம் உருவாக்கத் தொடங்கியிருப்பதால், தலைமை பொறுப்பில் இருக்கும் சேலத்துக்காரர் கொதிப்பில் இருக்கிறாராம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2024, 03:51 PM IST
  • இலைக்கட்சிக்குள் அடுத்த பைட் ஸ்டார்ட்
  • சேலத்துக்காரருக்கு எதிராக மாஜிக்கள்
  • கோட்டை தேர்தலுக்கு முன்பாக கலகம் உருவாகலாம்
கிசுகிசு : மாஜிக்கள் மனம்மாற தொடங்கியிருப்பதால் கோபத்தில் இருக்கும் சேலத்துக்காரர் title=

Gossip News Tamil : காலையில் இருந்து டீ மாஸ்டர் ஆவலோடு எதிர்பார்க்க, நிறுத்தி நிதானமாக வந்தான் குசும்பன். ‘ அண்ணே சூடா ஒரு டீ போடுங்க’ என சொல்லிட்டு வடையை வாயில் எடுத்து போட்டுக் கொண்டு மாஸ்டரை பார்த்தான். ‘என்னப்பா சேதி?’ என அவர் கேட்க, இலைக்கட்சி மேட்டரை ஆரம்பித்தான் குசும்பன். ‘அண்ணே, சேலத்துக்காரர் இப்போது கடும் கோபத்தில் இருக்கிறார். மாஜிக்கள் எல்லாம் இவரோட பேச்சை கேட்கிறது இல்லையாம். தடியெடுத்தவன் தண்டல்காரன் கணக்கா, அவங்களாவே ஒரு முடிவு எடுத்து அந்தந்த பகுதிகளில் ராஜ்ஜியம் பண்றாங்களாம். கூடவே, சேலத்துக்காரரையும் மிரட்டுறாங்களாம். 

மேலும் படிக்க | கிசுகிசு : ரகசியங்களை கசியவிடும் திருச்சிக்காரர், தலைவலியில் பூ கட்சி காக்கி மாஜி..!

தென் மாவட்டம் பக்கம் போனப்ப, சேலத்துக்காரர்கிட்ட எல்லோரும் ஒன்னு சேரலாம், நீங்க அதுக்கு ஒத்துவரனும் என நிர்வாகிகள் பலர் கேட்டார்களாம். அதுக்கு கடுப்பான சேலத்துக்காரர், ’கட்சிக்கு துரோகம் செஞ்சிட்டு போனவங்க கூட ராசியாகலாம்னு சொல்றீங்ளா?’ என முறைச்சாராம். அப்புறம், இப்போதே கட்சி வேலைகளில் தீவிரமா வேலை செய்யுங்க, அடுத்த தேர்தல்ல நல்ல ரிசல்ட் கொடுங்கனு சொல்லிட்டு வந்துட்டாராம். ஆனால், தென் மாவட்டங்கள்ல சேலத்துக்காரர் மேல கட்சி அடிமட்ட தொண்டர்களுக்கு நல்ல பேரு இல்ல, எல்லாம் சேர்ந்தா தொண்டர்கள் சந்தோஷமா வேலை பார்ப்பாங்க, அதை சொன்னா புரிஞ்சிக்கமாட்டேங்குறாரு. எத்தனை தேர்தல் தோத்துக்கிட்டே இருக்கிறது? என அங்கிருக்கும் மாஜிக்கள் புலம்புறங்களாம். 

வாய்ப்பு கிடைச்சா, சேலத்துக்காரருக்கு எதிர்முகாமில் கூட ஐக்கியமாக தயாரா தான் இருக்காங்களாம். ஆனால் சூழல் வரட்டும்னு வெயிட் பண்றாங்களாம். குறிப்பாக செல்லூரார் ஏற்கனவே அந்த மனநிலைக்கு வந்துட்டாராம். நாங்கள் எல்லாம் என்ன அம்மாவா? தலைவரா?, சொன்ன உடனே மக்கள் ஓட்டு போடுறத்துக்கு, நாங்களும் கூவிக்கூவி தான் கட்சி வேலை செஞ்சோம். ஆனாலும் மக்கள் ஓட்டுபோடல என செல்லூரார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போதே அவரு என்ன மைன்ட்செட்டில் இருக்கிறாருன்னு சேலத்துக்காரர் புரிஞ்சுக்கிட்டாராம். எப்போ வேணாலும், அவரு அணி மாறலாம்னு தெரிஞ்சுக்கிட்ட சேலத்துக்காரர் அவர் கிட்ட மாசெ பதவியை பிடுங்கலாம்னு நினைச்சாராம். ஆனால், சீனியர்கள் இப்போது வேண்டாம் என சொன்னதால அமைதியா இருக்கிறாராம்.

செல்லூரார் மட்டுமில்ல, முன்னாள் மாஜிக்கள் பலரோட எண்ணம் பிரிஞ்சி இருக்கிறவங்க அடுத்த கோட்டை தேர்தலுக்கு முன்னால சேர்த்துடலாம்னு தான் நினைக்கிறாங்களாம். அந்த எண்ணம் கொஞ்சம்கூட சேலத்துக்காரர் கிட்ட இல்ல. அதனால் சேலத்துக்காரர் அணியிலேயே இப்போது ஒரு அதிருப்தி குழு உருவாயிடுச்சி. இதை தெரிஞ்சுக்கிட்ட சேலத்துக்காரரும் செம கடுப்புல இருக்கிறதால, அடுத்த ரவுண்டு கலகத்தை எதிர்நோக்குது இலைக்கட்சி’ என இன்றைய கதையை முடிச்சிட்டு கிளம்பினான் குசும்பன்.

மேலும் படிக்க | கிசுகிசு : பெரிய கவிஞருக்கு எம்எல்ஏ ஆசை வந்துருச்சாமே...! சூரிய கட்சியில் சீட் கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News