இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-க்கு முடிவு கட்டுவோம் - தினகரன் அதிரடி

Last Updated : Sep 15, 2017, 03:07 PM IST
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-க்கு முடிவு கட்டுவோம் - தினகரன் அதிரடி title=

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-க்கு முடிவு கட்டுவோம் என அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதைக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தயவால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். ஆனால் தற்போது சசிகலாவுக்கு எதிராக செயல் படுவதோடு, அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். ஓபிஎஸ் போலவே எடப்பாடி பழனிச்சாமியும் துரோகம் இழைந்து விட்டார். எனவே அவரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-க்கு முடிவு கட்டுவோம். இத்தனை நாள் பொறுத்து இருந்தோம். சட்டமன்றத்தில் துரோகத்துக்கு முடிவு கட்டுவோம். எடப்பாடி பழனிசாமியை நீக்கா விட்டால், ஆட்சியை கவிழ்ப்போம் என டிடிவி தினகரன் கூறினார்.

Trending News