பாஜகவுக்கு எதிராக மதுரையில் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக மதுரையில் எஸ்டிபிஐ நடத்தும் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். அவரின் இந்த மூவ் அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 5, 2024, 01:31 PM IST
  • எடப்பாடி பழனிசாமி கூட்டணி கணக்கு
  • பாஜக கூட்டணிக்கு என்டு கார்டு போடுகிறார்
  • எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்
பாஜகவுக்கு எதிராக மதுரையில் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..! title=

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கு தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி ஏறத்தாழ முடிவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் நகர்வு தான் இப்போது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவர்களுக்கு பாஜவோடு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க விருப்பமில்லை. சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காது என்பதோடு, தங்களுக்கு இருக்கும் வாக்கு வங்கியையும் பாஜவுக்கு தாரைவார்ப்பதாக அமைந்துவிடும் என்பதையும் அதிமுக மூத்த தலைவர்கள் அறிந்திருக்கிறார்கள். இது 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதால், பாஜக கூட்டணிக்கு இப்போதே என்டு கார்டு போட்டுவிடலாம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 

மேலும் படிக்க | சென்னை மக்கள் கவனத்திற்கு... முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - என்ன காரணம்?

அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். பாஜக இல்லாதபோது, சிறுபான்மை கட்சிகள் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்த்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவு வெற்றி பெறாவிட்டாலும், இந்த கூட்டணி, சட்டமன்ற தேர்தலில் நல்ல முடிவை கொடுக்கும் என எடப்பாடி தரப்பு நம்புகிறது. அத்துடன் பிரச்சார களத்தில் திமுகவை எதிர்கொள்ளவும் இந்த கூட்டணி யுக்தி கைகொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அதற்கு ஏற்ப எஸ்டிபிஐ கட்சி ஜனவரி 7 ஆம் தேதி மதுரையில் நடத்தும் பாஜகவுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அப்போது மத்திய பாஜகவை கண்டித்து உரையாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அணுகுமுறை அதிமுக மீது மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுக் கொடுக்கும் எனவும் அவர் நம்புகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த அரசியல் கணக்கு தேர்தல் களத்தில் கைகொடுக்குமா? என்றால் சந்தேகம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஏனென்றால் தேர்தலுக்குப் பிறகு எப்படியும் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி சேர தயங்கமாட்டார், அதனால் இந்த அரசியல் சித்து விளையாட்டை எல்லாம் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள் என கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாம்... காரணத்தை சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News