நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை நோக்கி பயணிக்கும் திமுக!

அக்டோபர் 25-ஆம் நாள் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என கழக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்!

Last Updated : Oct 21, 2018, 02:04 PM IST
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை நோக்கி பயணிக்கும் திமுக! title=

அக்டோபர் 25-ஆம் நாள் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என கழக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் 2019-கான பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் வரும் 25-ஆம் நாள் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்டோபர் 25-ஆம் நாள் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என கழக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடந்த 17 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்தது. 

இதில் புதுமுகங்கல், வழக்கறிஞர்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். இளம் திமுக நிர்வாகிகளுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கிறது. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அந்த பகுதியில் வாழும் சமுதாய மக்களுக்கு தகுந்தவாறு பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 25-ஆம் நாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தி.மு.க தெரிவித்துள்ளது!

Trending News