சிகிச்சை நிறைவு- வீடு திரும்பினார் கருணாநிதி

Last Updated : Aug 16, 2017, 11:42 AM IST
சிகிச்சை நிறைவு- வீடு திரும்பினார் கருணாநிதி title=

தொண்டையில் செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த சிகிச்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. 

கடந்த 7 மாதங்களாக அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டையில் உணவு செலுத்துவதற்கான குழாய் மாற்றப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேர ஓய்வுக்கு பின் கருணாநிதி, கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார். அவருடன் ராசாத்தி, கனிமொழி, தமிழரசு மற்றும் செல்வி ஆகியோர் சென்றனர்.

Trending News