சீமானை கண்டித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது

சீமானை கண்டித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை அடித்து இழுத்துச் சென்று கைது செய்தது காவல் துறை.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 24, 2021, 06:29 PM IST
சீமானை கண்டித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது title=

சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக் கோரி கோவை  தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த திமுக இளைஞரணி  மற்றும் விவசாய அணியினர் சீமானை கண்டித்து கோசங்களை எழுப்பினர். 

இதனைத் தொடர்ந்து திமுக வினரை போராட்ட இடத்தை விட்டு கிளம்பச்சொல்லி  காவல் துறையினர் அறிவுறுத்தினர். இந்நிலையில் திமுகவினர், காவல் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தள்ளு முள்ளு ஏற்பட்டதால் காவல் துறையினர் திமுக வினர் 15 பேரை கைது செய்தனர். சீமானை கண்டித்து கோசங்களை எழுப்பிய திமுகவினரை  காவல் துறையினர் தள்ளியும், அடித்தும்,  இழுத்துச்சென்று கைது செய்தனர்.  

வீடியோவை இங்கே காணலாம்:

 

பத்திரிக்கையாளர்களிடம் எம். எஸ் .ராமமூர்த்தி மேற்கு மாவட்ட திமுக விவசாயி  அணி அமைப்பாளர் பேசுகையில், நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த  இடத்தருகே சீமானை எச்சரிக்கும் விதமாக கோசங்களை எழுப்பியதாகவும்,  திமுகவையும், தலைவரையும் ஜனநாயக முறைப்படி விமர்சிப்பது தவறல்ல என்றார். அதே போன்று, தளபதியையோ, கட்சியையோ , தளபதியின் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசுவதை கண்டிப்பதாக தெரிவித்தார். இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடமருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ | பணப்பை என நினைத்து வங்கி ஊழியரின் உணவுப்பையை திருடிய நபர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News