தாண்டவம் ஆடிய கஜா: 30,000 மின்கம்பம்; 40,000 மரங்கள்; 12,000 குடிசைகள் நாசம்

கோர தாண்டவம் ஆடிய கஜா புயல்... அனைத்தையும் இழந்து மக்கள் தவிப்பு....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2018, 10:21 AM IST
தாண்டவம் ஆடிய கஜா: 30,000 மின்கம்பம்; 40,000 மரங்கள்; 12,000 குடிசைகள் நாசம் title=

வங்கக் கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் எந்தப் பகுதியைத் தாக்கும் என்பதை கணிக்க வானிலை ஆய்வு மையத்துக்கு பெரும் சவாலாகவே இருந்தது. கடைசியாக கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடந்தது. கஜா புயல் தாக்கியதால் டெல்டா மாவட்டங்களாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

பாதிக்கபட்ட பகுதிகளில் மீட்பு, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விதித்துள்ளது. 

அதிதீவிரமாக வீசிய கஜா புயலால் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 30 கிராமங்கள் முழுவதும் மிக மோசமாக பாதிக்கபட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்கள், டோல்-கெட் என எதுவும் தப்பவில்லை.

கஜா புயலால் கிட்டத்தட்ட 30 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன. 40-க்கு மேற்ப்பட்ட மரங்கள் சேதமடைந்தன. 12 ஆயிரம் குடிசைகள் நாசமாயின. ஏராளமான விலங்குகளும் பலியாகியுள்ளன.

கஜா புயலால் இதுவரை 30-க்கு அதிகமானோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இதுக்குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அறிவிக்கவில்லை. 13 பேர் மட்டும் உயிரிழந்ததாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வீடுகளை இழந்தவர்கள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெறு வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன

போக்குவரத்தை சீரமைக்க முன்னுரிமை தந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம், குடிநீர், வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்

Trending News