அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 23, 2024, 01:08 PM IST
  • அரசின் சார்பில் குளிர்ந்த மோர் தண்ணீர் பாட்டில்கள் பிஸ்கட் பாக்கெட்டுகள் விநியோகம்.
  • வெளியிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 2500 பேருந்துகளும், 6 சிறப்பு ரயில்களும் இயக்கம்.
  • பாதுகாப்பு பணியில் 5000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள் title=

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களும் சிறப்புமிக்க மாதங்களாக கருதப்படுகிறது, மேலும் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுவதும் வழக்கம். 

குறிப்பாக திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதங்களிலும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வருகின்றனர்.

ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை மாதம் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்று, கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய 25 லட்சம் பக்தர்களைப் போலவே இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பௌர்ணமி நிலவில் கிரிவலம் வருவார். 

மேலும் படிக்க | சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..

அதன்படி இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று அதிகாலை 04.16 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 05:47 மணிக்கு நிறைவடைய உள்ளதாக திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து இன்று திருவண்ணாமலைக்கு வருகை தருவதால் தமிழ்நாடு அரசின் சார்பில் 2500 சிறப்பு பேருந்துகளும், 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன, அதுமட்டுமின்றி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 250 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் கிரிவலப் பாதை முழுக்க 350 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 

பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருவண்ணாமலை, விழுப்புரம் கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், தர்மபுரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன் கிரிவலப் பாதை முழுக்க பல்வேறு இடங்களில் உயர் கோபுரம் அமைத்து தீவிரமாக பக்தர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 

கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கிரிவலப் பாதையில் 105 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் நெகிழியை பயன்படுத்தாமல் வாழை இலை, பாக்கு மட்டை, மந்தார் இலை உள்ளிட்ட வகைகளை கொண்டு அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர், இந்த நிலையில் இன்று அதிகாலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர், ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படும் பக்தர்கள் திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியேற்றப்படுகிறார்கள்.

கோடை வெயிலை பக்தர்கள் சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் திருக்கோவிலுக்குள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பாட்டில்கள், குளிர்ந்த மோர், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் தொடர்ந்து பக்தர்களுக்கு தன்னார்வலர்களால் வழங்கப்பட்டு வருகின்றது. 

அதுமட்டுமின்றி கொளுத்தும் வெயிலை சற்றும் பொருட்படுத்தாத பக்தர்கள் கொளுத்தும் வெயிலிலும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் காலில் காலணியின்றி அண்ணாமலையாருக்கு அரோகரா பக்தி முழக்கமிட்டு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர், மாலைக்கு மேல் சித்ரா பௌர்ணமி நிலவு வந்தவுடன் கிரிவலப் பாதையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News