சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு

Armstrong murder : சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 5, 2024, 10:33 PM IST
  • சென்னையில் பிஎஸ்பி தலைவர் படுகொலை
  • ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தலைவர்கள் கண்டனம்
  • கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு title=

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள வீட்டின் அருகே நின்றுகொண்டு அவரின் ஆதர்வாளர்களுடன் பேசிகொண்டு இருந்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சாலையில் நின்றுகொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற இருவரையும் மர்ம கும்பல் வெட்டியுள்ளது.

மேலும் படிக்க | கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம்: மலர்களின் குமுறல்

இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஆம்ஸ்ட்ராங்கை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு கிச்சைக்காக ஆயிரம்விளக்குஅப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்க்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்பியம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரம்பூர் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடத்தப்பட்டதா? அல்லது அரசியல் பிரச்சினையா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க உடனடியாக 8 தனிப்படைகள் போடப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலைக்கு மனிதநேய மக்கள்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் சென்று பார்த்தார். அப்போது அவரால் கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுதார். இதனையடுத்து அரசுக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் நிலவுவதால் பெரம்பூர் பகுதியில் காவல்துறை பெருமளவு குவிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | AI விஜயகாந்த்... விஜய்க்கு அப்போ ஓகே சொன்ன பிரேமலதா... இப்போது மறுப்பது ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News