பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!! ஏன்?

Last Updated : Nov 5, 2017, 04:22 PM IST
பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!! ஏன்? title=

கந்துவட்டி புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பிரபல கார்ட்டூனிஸ்டை அவதூறு பரப்பும் வகையில் இருந்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டார். 

சென்னையை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா. சில நாட்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ வைத்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. 

இதைதொடர்ந்து இதுகுறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் நெல்லை மாவட்ட ஆட்சியரையும் போலீசாரையும் கிண்டல் செய்யும் வகையில், கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
இதையடுத்து கந்துவட்டி குறித்து அவதூறு பரப்புவதாக கூறி கார்ட்டூனிஸ்ட் பாலா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவூரில் கைது செய்யப்பட்ட பாலா திருநெல்வேலி கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Trending News