சென்னையில் பஸ் ஸ்டிரைக் - மக்கள் சிரமம்

Last Updated : May 16, 2017, 09:42 AM IST
 சென்னையில் பஸ் ஸ்டிரைக் - மக்கள் சிரமம் title=

நேற்று நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை யொட்டி திங்ககிழமை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடயுள்ளனர்

13_வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடுசெய்ய வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை நிர்வாக பிரதிநிதிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் திங்ககிழமை(15-ம் தேதி) வேலைநிறுத்தம் தொடங்கும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.மேலும் தமிழகத்தின் சில பகுதிகளில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கிவிட்டது என தகவல் வந்துள்ளது.

Trending News