சென்னை உயர் நிதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை தொடங்கியது

EPS Appeal in Court Hearing: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2022, 01:19 PM IST
  • அதிமுக பொதுக்குழு தொடர்பான மெட்ராஸ் உயர் நீதிமன்ற தீர்ப்பு மீதான மேல் முறையீடு
  • மெட்ராஸ் உயர் நீதிமன்ற தீர்ப்பு மீதான மேல் முறையீடு விசாரணை தொடங்கியது
  • ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வழக்கறிஞர்களின் பொறி பறக்கும் வாதம்
சென்னை உயர் நிதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை தொடங்கியது title=

சென்னை: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்னும் நிலையில் யூகங்களின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பளித்தாகவும், ஜூலை ஒன்றாம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளதை தனி நீதிபதி ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் ஈ பி எஸ் தரப்பு தெரிவித்தது. 

2539 பொதுக்குழு உறுப்பினர்கள் இ பி எஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அப்பால் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று இபிஎஸ் தரப்பு தெரிவித்தது, மேலும் அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளதும் தவறானது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தனி நீதிபதி உத்தரவு உள்ளது என்று தெரிவித்த ஈபிஎஸ் தரப்பு, ஒற்றை தலைமை வேண்டும் கோரிக்கைக்கு புள்ளி விவரங்கள் இல்லை, ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலிப்பில்லை போன்ற தனி நீதிபதியின் முடிவுகள்  யூகத்தின் அடிப்படையிலானது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸூக்கு எதிராக மேல்முறையீடு; எடப்பாடி போடும் கணக்கு

தனி நீதிபதியின் உத்தரவு தனி ஒரு நபர்  பயனடையும் வகையில் தான் உள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் இல்லை என்றும், 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அடுத்த கூட்டம் ஜூலை 11ல் நடக்கும் என ஜூன் 23ம் தேதி அறிவிக்கப்பட்டது என்பதும் நீதிபதிகளின் முன் வாதமாக முன்வைக்கப்பட்டது. 

2539 பொதுக்குழு உறுப்பினர்கள் தன்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்திருப்பதால், தனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது நிரூபணமாகியுள்ளது என்று எடப்பாடியாரின் தரப்பு தெரிவித்தது. கட்சியின் பொதுக்குழு உச்சபட்ச அமைப்பு என்பதால் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் ஆதரவும் இல்லை என கூற முடியாது. ஒன்றரை கோடி உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற வாதம் ஏதும் தனி நீதிபதி முன்பாக மனுதாரர்கள் தரப்பில் முன் வைக்கப்படவில்லை என்றும் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்காத நிலையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், வழக்குத் தொடுத்தவர் கேட்காத நிவாரணத்தை இடைக்கால உத்தரவாக நீதிபதி பிறப்பித்துள்ளார் என்றும் கூறிய ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், ஜூலை 11ல் பொதுக்குழு குறித்து ஜூன் 23 கூட்டத்தில் அறிவித்ததாக மனுதாரர்கள் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் படிக்க | இணைந்து சேயல்படுவோம் : எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

2539 பேரும் தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்கள் என்றும், முந்தைய நிலையே தொடர வேண்டும் என்ற உத்தரவால் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாக இருந்தும் செயல்பட முடியாத நிலை உள்ளது என்றும் தெரிவித்த வழக்கறிஞர், பொதுக்குழு முடிவே இறுதியானது என்பதால், அதை ஏற்றுக்கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும் என்றும், பொதுக்குழு தொடர்பாக உரிய நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என எந்த பொதுக்குழு உறுப்பினரும் புகாரளிக்கவில்லை என்றும் தங்களது வாதத்தை முன் வைத்தது.

அதனைத் தொடர்ந்து, முன்வைக்கப்பட்ட வாதத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் படிவத்தில் கையெழுத்திட பன்னீர்செல்வம் மறுத்ததால் சின்னம் கிடைக்காமல் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர் என்றும், பொதுக்குழு கூட்டுவ்து தொடர்பான கட்சி விதிகளில் நோட்டீஸ் கொடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும், கட்சி நிர்வாகம் குறித்த முடிவுகளை எடுக்கும் பொதுக்குழுவின் முடிவுகளே இறுதியானது என்பதால், கட்சியினர் அதற்கு கட்டுப்பட வேண்டும் எனது கட்சியின் விதி என்று சுட்டிக்காட்டப்பட்டது.  

கட்சியின் அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என தனி நீதிபதி கூறுகிறார், ஆனால் அடிப்படை உறுப்பினர்கள் முடிவு எடுக்க அதிகாரமில்லை என்பதால், அடிப்படை உறுப்பினர்களை அழைப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்ற காரணத்துக்காகவே அதை ரத்து செய்யலாம் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | அதிமுக விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை : சபாநாயகர் அப்பாவு

கட்சி விதிகளை புறக்கணித்து தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாக குறிப்பிட்ட இபிஎஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இருவரும் இணைந்து செயல்படுவது இனி நடக்காது. தனி நீதிபதியின் உத்தரவால் கட்சி செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்றும், இருவர் இடையேயான பிரச்சனை தான் வழக்குகள் தொடரவே காரணமாக உள்ளது என்றும் சுட்டி காட்டியது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இரட்டை  தலைமை அடிப்படையில் இருவரும் இணைந்து செயல்படுவது இனி நடக்காது. தனி நீதிபதியின் உத்தரவால் கட்சி செயல்பட முடியாத நிலை ஏற்படும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் தான் வழக்கே தொடரப்பட்டது என்றும், தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் ஓபிஎஸ் வழக்கு தொடந்துள்ளார், ஆனால் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் உரிமை ஏதும் பாதிக்கப்படவில்லை என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது

கூட்டம் நடத்த கூடாது என ஒபிஎஸ் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது என்றும், இருவரும் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட உத்தரவிட்டுள்ளதால், ஒரு தரப்பு நீதிமன்றத்துக்கு வந்து கூட்டங்களை கூட்டுவது குறித்து நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டி வரும் என்பதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க | அதிமுக அலுவலகம் எங்களின் புனிதத் தலம் : அதைக் காலால் மிதிக்கலாமா ? - சி.வி.சண்முகம் ஆவேசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News