தாய்-ன் சடலம் மேல் அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜை! மக்கள் அதிர்ச்சி!

திருச்சி அருகே அகோரி ஒருவர் இறந்த தனது தாய்க்கு விசித்திரமான முறையில் இறுதிச் சடங்கு செய்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Last Updated : Oct 2, 2018, 12:25 PM IST
தாய்-ன் சடலம் மேல் அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜை! மக்கள் அதிர்ச்சி! title=

திருச்சி அருகே அகோரி ஒருவர் இறந்த தனது தாய்க்கு விசித்திரமான முறையில் இறுதிச் சடங்கு செய்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை காசியில் அகோரி பயிற்சி பெற்ற திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார். 

இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி பூஜை, வளர்பிறை அஷ்டமி பூஜை, தேய் பிறை அஷ்டமி பூஜை ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கோவில் நிர்வாகியான அகோரி மணிகண்டனின் தாயார் மேரி திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக அந்த அகோரியின் தாயார் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதில் அகோரிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இடுகாட்டிற்கு சென்றதும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது அகோரி மணிகண்டன் தனது தாயின் உடல் மீது அமர்ந்து, மந்திரங்கள் ஓத பூஜைகள் செய்தார். இவ்வாறு இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அஞ்சலி பூஜை நடத்தினால் அவரது ஆன்மா இறைவனை சென்றடையும் என்று விளக்கம் கூறப்பட்டது. மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதி  மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Trending News