செவிலியர்களுடன் படம் பார்த்த நடிகர் விஜயகாந்த்!

விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2021, 02:04 PM IST
செவிலியர்களுடன் படம் பார்த்த நடிகர் விஜயகாந்த்! title=

துபாய் : விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2014ம் ஆண்டு முதலே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுவருகிறார்.  இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். அப்போது விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வருதமடைய செய்தது. அந்த புகைப்படத்தைப் பார்த்த அவருடைய ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் ‘எங்கள் கேப்டனா இது?’ என்று வருத்தம் தெரிவித்தனர்.

தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துபாயில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்தின் புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. விஜயகாந்தின் ட்விட்டர் பதிவில், ''நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயகாந்துக்கு சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் கூறப்படுகிறது.  இதனிடையே விஜயகாந்துடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் துபாய் செல்வதாக இருந்தது. ஆனால் பாஸ்போர்ட் பிரச்சினை காரணமாக அவரால் கணவர் விஜயகாந்துடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

 

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் பிரேமலதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கணவர் விஜயகாந்த் துபாயில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு உதவியாக இருக்க தான் துபாய் செல்ல வேண்டும். அதனால் தனது பாஸ்போர்ட்டை திருப்பித்தர வேண்டும் என கூறி இருந்தார்.  மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி பிரேமலதாவிடம் பாஸ்போர்ட் திருப்பி கொடுக்கப்பட்டது. அவர் துபாய் சென்றார்  சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News