அறந்தாங்கி அருகே பெரியார் சிலை உடைப்பு

அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை இன்று உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Last Updated : Apr 8, 2019, 10:07 AM IST
அறந்தாங்கி அருகே பெரியார் சிலை உடைப்பு title=

அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை இன்று உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை 1998ம் ஆண்டில்  வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சிலையின் தலைப்பகுதியை இன்று மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News