5 வயது சிறுவன், 75 வயது மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு - கஞ்சா போதை ஆசாமியின் வெறிச்செயல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா போதையில் இருந்த 20 வயது இளைஞர் ஒருவர் 5 வயது சிறுவனையும், 75 வயது மூதாட்டியையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2022, 02:00 PM IST
  • வீட்டு வெளியே பூக்கட்டிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு
  • தடுக்க சென்ற சிறுவனையும் அரிவாளால் வெட்டிய போதை ஆசாமி
  • தலைமறைவாக உள்ள யுவராஜ்க்கு போலீசார் வலைவீச்சு
5 வயது  சிறுவன், 75 வயது மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு - கஞ்சா போதை ஆசாமியின் வெறிச்செயல்! title=

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது பக்கத்து வீட்டில் செய்யாறு பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் - சுகுணா தம்பதி மற்றும் சுகுணாவின் 75 வயது தாய் நாகம்மாள் ஆகியோர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். யுவராஜ் தொடர்ச்சியாக கஞ்சா போதையில் அவ்வபோது அப்பகுதியில் எப்போதும் பிரச்னையில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மீண்டும் கஞ்சா போதையில் இருந்த யுவராஜ் தனது வீட்டின் வாயிலில் பூக்கட்டி கொண்டிருந்த மூதாட்டி நாகம்மாளை திடீரென தனது வீட்டிற்குள் தரதரவென இழுத்துச்சென்று கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த ஐந்து வயது சிறுவன் புவியரசனையும் அரிவாளால் வெட்டிவிட்டு வெளி பக்க கதவை பூட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

மூதாட்டி மற்றும் சிறுவனின் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளிப்பக்கம் மூடியிருந்த கதவை திறந்தபோது ரத்த வெள்ளத்தில் இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுவன் மற்றும் மூதாட்டி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து யுவராஜின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள யுவராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | தாய்லாந்தில் களைகட்டப்போகும் கஞ்சா பீட்சா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News