10 விக்கெட் தோல்வியால் விராட் கோலிக்கு கிடைத்த பெயர்...

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கண்ட தோல்வியின் மூலம் அணித்தலைவர் விராட் கோலி தேவையற்ற சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்!

Last Updated : Jan 15, 2020, 12:30 PM IST
10 விக்கெட் தோல்வியால் விராட் கோலிக்கு கிடைத்த பெயர்... title=

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கண்ட தோல்வியின் மூலம் அணித்தலைவர் விராட் கோலி தேவையற்ற சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்!

செவ்வாயன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததை அடுத்து, விராட் கோலி கேப்டனாக தேவையற்ற ஒரு சாதனையை பதிவு செய்துள்ளார். இப்போட்டியின் தோல்வியின் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 விக்கெட் இழப்பு பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெயரை பெற்றுள்ளார். 

ஒருநாள் போட்டிகளில், இந்தியா இதற்கு முன்பு நியூசிலாந்து (1981), மேற்கிந்திய தீவுகள் (1997), தென்னாப்பிரிக்கா (2000) மற்றும் தென்னாப்பிரிக்கா (2005) ஆகியோரிடம் 10 விக்கெட் தோல்வியை சந்திதுள்ளது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தற்போது 10 விக்கெட் இழப்பினை பதிவு செய்துள்ளது. 

இந்த தோல்வியை அடுத்து இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் பினிலை பெற்றுள்ளது. இருப்பினும், ராஜ்கோட்டில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீண்டு எழுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கோட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் திணறியது. இந்நிலையில் ஆட்டத்தின் 49.1-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்தது.

அணியில் அதிகப்பட்சமாக ஷிகர் தவான் 74 ரன்களை எடுத்தார். இவருக்கு துணையா கே.எல் ராகுல் 47(61) ரன்கள் குவித்தார். அணித்தலைவர் விராட் கோலி 16(14) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்ச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாட் கம்மீஸ் மற்றும் கேன் ரிச்சர்ட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்ணர் 128(112) மற்றும் அரோன் பின்ச் 110(114) ரன்கள் என இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியினை உறுதி செய்தனர். ஆட்ட நாயகன் விருதினை டேவிட் வார்ணர் தட்டி சென்றார்.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கட் மைதானத்தில் ஜனவரி 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Trending News