Tokyo Olympics 2020: ஒலிம்பிக்கில் சாதிக்க போகும் தமிழக தங்கங்கள்

மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற தமிழக தங்கங்கள் பதக்கம் வென்று இந்திய கொடியை ஜப்பானில் வெற்றிக் கொடியாய் மிளிரச்செய்வது உறுதி. நம்பிக்கையுடன் இருப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2021, 07:30 PM IST
  • இந்தியாவின் சார்பில் 125 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
  • முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் அதிக வீரர்கள் பங்கேற்கின்றனர்.
  • தமிழக வீரர்கள் தங்கம் வெல்ல அனைத்து மக்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்
Tokyo Olympics 2020: ஒலிம்பிக்கில் சாதிக்க போகும் தமிழக தங்கங்கள் title=

Tokyo Olympics 2020: விளையாட்டு வீரர்களின் கனவு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று துவங்கியது. இந்தியாவின் சார்பில்  18 விளையாட்டுகளில் பங்கேற்க 125 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். ஒரு ரிசர்வ் கோல்கீப்பர் மற்றும் இரண்டு மாற்று வீரர்களுக்கும் தனி இடம் வழங்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து வீரர்களின் உட்சபட்ச கனவு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது, பதக்கம் வெல்வது. 2020 ஆம் ஆண்டு நடக்கவிருந்த இப்பெருமைமிகு விளையாட்டு திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணாமாக ஓராண்டு கழித்து, இன்று முதல் ஆரம்பமாகின. 

இந்தியாவில் இருந்து 125 வீரர்கள்:
இந்தியா சார்பில் 125 வீரர்கள் கலந்துக்கொள்கிறார்கள். அதில் நாடு முழுவதிலும் இருந்து 18 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக வீரர்கள் பங்கேற்கின்றனர். 

தமிழக வீராங்கனை மற்றும் வீரர்கள்:
தமிழக வீராங்கனைகள்:  பவானி தேவி, இளவேனில் வாலறிவன், சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி ஆவார்கள். 
தமிழக வீரர்கள்: சரத் கமல், சத்யன் ஞானசேகரன், விஷ்ணு, நேத்ரன் குமரன், ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டி உள்ளிட்ட பங்கேற்கின்றனர். 

ALSO READ | Tokyo Olympics 2020: இந்தியாவின் பதக்க கனவை ஏந்திச் செல்லும் ஒலிம்பிக் தாரகைகள்!!

தமிழக அரசு ஊக்கத்தொகை மற்றும் பரிசு:
தமிழகத்திலிருந்தும் இந்த ஆண்டு அதிக வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களை ஊக்குவிக்க ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அனைத்து வீரர்களுக்கும் தலா 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆட்டங்களில் தனித்துவ திறமைகளுடன் தன்னம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் தமிழக வீரர்கள் தங்கம் வெல்ல அனைத்து மக்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.2 கோடயும், வெண்கலப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் இந்திய கொடி மிளிரும்:
மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற தமிழக தங்கங்கள் பதக்கம் வென்று இந்திய கொடியை ஜப்பானில் வெற்றிக் கொடியாய் மிளிரச்செய்வது உறுதி. நம்பிக்கையுடன் இருப்போம்.

ALSO READ | Tokyo Olympics: வில்வித்தை ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி 9வது இடம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News