2018 காமன்வெல்த் போட்டிக்கு சாக்ஷி மாலிக் தேர்வு!

ல்யுத்த விளையாட்டு தகுதிச் சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 

Last Updated : Dec 30, 2017, 08:07 PM IST
 2018 காமன்வெல்த் போட்டிக்கு சாக்ஷி மாலிக் தேர்வு! title=

2018 காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகளுக்கு சாக்ஷி மாலிக் தேர்வு!

அடுத்தாண்டு (2018) ஏப்ரல் 4-ஆம் நாள் துவங்கி 15-ஆம் நாள் வரை ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதற்கான மல்யுத்த விளையாட்டு தகுதிச் சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 

இதில் கடந்த டிச., 29-ஆம் நாள் நடைபெற்ற ஆடவர் 74 கிலோ எடைப் பிரிவு தகுதிச் சுற்றுப்போட்டியில் ஜிதேந்தர் குமாரை வீழ்த்தி சுஷில் குமார் தகுதி பெற்றார்

இந்நிலையில், மகளிர் பிரிவில் நடைபெற்ற 62 கிலோ எடைப் பிரிவில் நட்சத்திர வீராங்கனை சாக்ஷி மாலிக், இன்று (டிச., 30) தகுதி பெற்றுள்ளார். இவர், ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத், 57 கிலோ எடைப் பிரிவில் பூஜா தண்டா, 54 கிலோ எடைப் பிரிவில் பபிதா குமாரி, 68 கிலோ எடைப் பிரிவில் திவ்யா கரண், 76 கிலோ எடைப் பிரிவில் கிரண் ஆகியோரும் 2018 காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்!

Trending News