ஆன்லைன் துப்பாக்கிசூடு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் முதலிடம்...

மூன்றாவது சர்வதேச ஆன்லைன் துப்பாக்கிசூடு சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டிகளில் இளம் ஷூட்டர் ருத்ராங்க் பாட்டீல் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஒதுக்கீடு பெற்றுள்ள யஷஸ்வினி சிங் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.

Last Updated : May 10, 2020, 04:21 PM IST
ஆன்லைன் துப்பாக்கிசூடு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் முதலிடம்... title=

மூன்றாவது சர்வதேச ஆன்லைன் துப்பாக்கிசூடு சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டிகளில் இளம் ஷூட்டர் ருத்ராங்க் பாட்டீல் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஒதுக்கீடு பெற்றுள்ள யஷஸ்வினி சிங் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.

மஹாராஷ்டிராவின் ருத்ராங்க்ஷ் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியை 252.9 என்ற உலக சாதனை மதிப்பெண்ணுடன் பெற்றார், இருப்பினும் இந்த மதிப்பெண்களை சர்வதேச துப்பாக்கி சூடு விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) கருத்தில் கொள்ளாது, ஏனெனில் இது அங்கீகரிக்கப்பட்ட சந்திப்பு அல்ல என தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக தங்கப்பதக்கத்தை கோரியிருந்த யஷஸ்வினி, 24 மீட்டர் துப்பாகி சூடு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார்.

ISSF உலகக் கோப்பை, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கௌரவ் ராணா மற்றும் மனு பாகர் ஆகியோர் முறையே 240.6 மற்றும் 218.3 மதிப்பெண்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.

மற்றொரு இளம் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் யஷ் வர்தன் 250.8 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், பிரான்சின் எட்டியென் ஜெர்மண்ட் 228.5 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பங்கேற்பாளர்கள் அவரவர் வீடுகளிலிருந்து ஜூம் இயங்குதளத்தில் உள்நுழைந்து மின்னணு இலக்குகளில் போட்டியிட்டனர். இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின், தஜிகிஸ்தான், லாட்வியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த துப்பாக்கிச் சூடு வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

சர்வதேச ஆன்லைன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் என்பது இந்தியாவின் முன்னாள் துப்பாக்கி சுடும் வீரர் ஷிமோன் ஷெரீப்பின் சிந்தனையாகும். இந்நிலையில் தற்போது COVID-19 தொற்றுநோயால் பூட்டப்பட்ட நிலையில் பல நாடுகளைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் போட்டியுடன் தொடர்பில் இருக்க இந்த செயல்முறை உதவியுள்ளது.

Trending News