டெஸ்ட் அணியில் இருந்து ரிஷாப் பன்ட் நீக்கம்? -BCCI அதிரடி முடிவு!

ரிஷாப் பந்த் மற்றும் சுப்மான் கில் ஆகியோரை டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்க இந்திய தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

Last Updated : Nov 23, 2019, 03:36 PM IST
  • உள்நாட்டு கிரிக்கெட்டில் சில போட்டிகளில் நேரங்களை செலவிட ரிஷாப் பந்த் மற்றும் சுப்மான் கில் ஆகியோரை டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்க இந்திய தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
  • ஆந்திர கீப்பர்-பேட்ஸ்மேன் கோனா ஸ்ரீகர் பாரத், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டின் எஞ்சிய பகுதியில் விருத்திமான் சஹாவின் இடத்தை நிறப்புவார் என கூறப்படுகிறது.
  • டெல்லியின் அடுத்த இரண்டு சூப்பர் லீக் போட்டிகளுக்கும், முறையே நவம்பர் 24 மற்றும் நவம்பர் 27 ஆகிய தேதிகளில் ஹரியானா மற்றும் ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ளது, இப்போட்டிகளில் ரிஷாப் பங்கேற்பார்.
டெஸ்ட் அணியில் இருந்து ரிஷாப் பன்ட் நீக்கம்? -BCCI அதிரடி முடிவு! title=

ரிஷாப் பந்த் மற்றும் சுப்மான் கில் ஆகியோரை டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்க இந்திய தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர் தொடருக்கு முன்னதாக உள்நாட்டு கிரிக்கெட்டில் சில போட்டிகளில் நேரங்களை செலவிட ரிஷாப் பந்த் மற்றும் சுப்மான் கில் ஆகியோரை டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்க இந்திய தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

ஆந்திர கீப்பர்-பேட்ஸ்மேன் கோனா ஸ்ரீகர் பாரத், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டின் எஞ்சிய பகுதியில் விருத்திமான் சஹாவின் இடத்தை நிறப்புவார் என கூறப்படுகிறது.

இதனிடையே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆறு போட்டிகளிலும் (3 டி20 மற்றும் 3 ஒருநாள்) ரிஷாப் விளையாடுவார் எனவும், சையத் முஷ்டாக் அலி டிராபியில் டெல்லி அணிக்காக அவர் விளையாடுவது விவேகமானதாக மட்டுமே தெரிவுசெய்தவர்கள் கருதியதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியின் அடுத்த இரண்டு சூப்பர் லீக் போட்டிகளுக்கும், முறையே நவம்பர் 24 மற்றும் நவம்பர் 27 ஆகிய தேதிகளில் ஹரியானா மற்றும் ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் ரிஷாப் பங்கேற்பார் எனவும், ரிஷாப் பன்ட் இருப்பு டெல்லி அணயை இறுதி போட்டி வரை கொண்டு செல்லும் எனவும் தேர்வுகுழு நம்புவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், சுப்மான் கில் கர்நாடகா (நவம்பர் 24) மற்றும் தமிழ்நாடு (நவம்பர் 25) ஆகியவற்றுக்கு எதிரான அடுத்த இரண்டு சூப்பர் லீக் ஆட்டங்களில் பஞ்சாப் அணிக்காக விளையாடுவார் எனவும் கூறப்படுகிறது.

சிவப்பு பந்து போட்டிகளில் இந்தியா ஏ-வின் வழக்கமான அம்சமாக விளங்கியுள்ள பாரத், கடந்த இரண்டு சீசன்களில் தனது தொடர்ச்சியான செயல்பாட்டால் சில ஆறுதல்களைப் பெற்றார். 69 முதல் வகுப்பு ஆட்டங்களில் எட்டு சதங்கள் மற்றும் 20 அரைசதங்களுடன் 3,909 ரன்கள் அவர் எடுத்துள்ளார், இதில் மூன்று சதங்கள் அடங்கும்.

2017-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ICC விதிப்படி, ஒரு அணி கீப்பருக்கு களத்தில் காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று கீப்பரினை அணி நியமிக்கலாம். இந்த விதியின் அடிப்படையில் பாரத் இடமாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், விருத்திமான் சஹா இந்த நேரத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார், எனவே பாரதத்தைச் சேர்ப்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

இதுகுறித்து பாரத் தெரிவிக்கையில்., "தற்போதைய யுகத்தின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான விருத்திமான். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். மிகவும் உற்சாகமாக இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

Trending News