2020 வரை டெல்லியில் கிரிக்கெட் போட்டி கிடையாது?

டெல்லியில் நிலவும் காற்று மாசால் தங்களால் இயல்பாக ஆட முடியவில்லை, சுவாச பிரச்சினை ஏற்படுகிறது என்று இலங்கை வீரர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தால் அடுத்த 2 ஆண்டுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.

Last Updated : Dec 6, 2017, 08:57 AM IST
2020 வரை டெல்லியில் கிரிக்கெட் போட்டி கிடையாது? title=

டெல்லியில் நிலவும் காற்று மாசால் தங்களால் இயல்பாக ஆட முடியவில்லை, சுவாச பிரச்சினை ஏற்படுகிறது என்று இலங்கை வீரர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தால் அடுத்த 2 ஆண்டுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.

அதற்கு காரணம், காற்று மாசு கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறைப்படி தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒதுக்குகிறது. அந்த வகையில் இனி 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை டெல்லியில் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பில்லை. 

கிரிக்கெட் வாரியத்தின் வருங்கால கிரிக்கெட் தொடர் அட்டவணைப்படி 2020-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்தில் தான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தப்படும் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

 

Trending News