ஐபிஎல் கிர்கெட் போட்டி நாளை முதல் தொடக்கம்

Last Updated : Apr 4, 2017, 10:36 AM IST
ஐபிஎல் கிர்கெட் போட்டி நாளை முதல் தொடக்கம் title=

உலகின் மாபெரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 10-வது தொடர் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி அதாவது நாளை தொடங்குகிறது. 

ஹைதராபாத்தில் நாளை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த கிரிக்கெட் திருவிழா மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 47 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் ஆட்டங்கள் 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை என 14 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன. 

நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடத்தப்படுகிறது. 

நாளை ஹைதராபாத்தில் தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில், புனே நகரில் 6-ம் தேதியும், ராஜ்கோட்டில் 7-ம் தேதியும், இந்தூரிலும், பெங்களூரிலும் 8-ம் தேதியிலும், மும்பையில் 9-ம் தேதியும், கொல்கத்தாவில் 13-ம் தேதியுமம், டெல்லியில் 15-ம் தேதியும் தொடக்க விழாக்கள் நடைபெறுகின்றன. 

Trending News