INDvsSA 5th ODI: தொடரை வெல்லுமா இந்தியா!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று செயிண்ட் ஜார்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைப்பெறுகிறது!

Last Updated : Feb 13, 2018, 12:36 AM IST
INDvsSA 5th ODI: தொடரை வெல்லுமா இந்தியா! title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று செயிண்ட் ஜார்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைப்பெறுகிறது!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

முன்னதாக, இத்தொடரில் நடைப்பெற்ற போட்டிகளில், மூன்று போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைப்பெறவுள்ள போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றால் தனது தொடர் வெற்றியை உறுதி செய்கிறது. முன்னதாக மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து பின்னர் நான்காவது போட்டியில் டக்வெல்த் முறையில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்க இத்தொடரை சமன் செய்ய வேண்டுமெனில் அடுத்து நடைபெறவுள்ள இரண்டு போட்களிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளது.

முன்னதாக நடைப்பெற்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் நிலவியது.

குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் மற்றும் சாஹல் இருவரும் 24 (4 போட்டிகளிலும்) விக்கெட்டுகளை எடுத்தனர்.  

அதே வேலையில் இந்திய அணியின் கேப்டன் கோலியும், தென்னாப்பிர்க்காவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார், எனவே இப்போட்டியில் கோலியின் விக்கெட்டை கைப்பற்றி விட்டார் தங்களது வெற்றியை உறுதி செய்து விடலாம் என தென்னாப்பிரிக்கா வீரர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

...இப்போட்டியை பற்றி...

இடம் - செயிண்ட் ஜார்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபெத் மைதானம்

நேரம் - பிப்.,10 _ 01:00 PM (உள்ளூர் நேரம்), 10 04.30 PM (இந்திய நேரம்)

Trending News