#IndonesiaMastersOpen: இறுதி போட்டிக்கு முன்னேறினார் சாய்னா!

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு சாய்னா தகுதி பெற்றார்!

Last Updated : Jan 27, 2018, 03:57 PM IST
#IndonesiaMastersOpen: இறுதி போட்டிக்கு முன்னேறினார் சாய்னா! title=

ஜகார்த்தா: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு சாய்னா தகுதி பெற்றார்!

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் கடந்த 23-ம் தேதி முதல் தொடங்கி இந்தோனேசியாவில் நடைப்பெற்று வருகின்றன. 

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. ஒரு அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகளான சாய்னா நேவால், தாய்லாந்தின் ரட்சனோக் இண்டனை எதிர்கொண்டார்.

போட்டியின் முதல் செட்டினை 21-19 என்ற கணக்கில் சாய்னா நேவால் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சாய்னா இரண்டாவது செட்டினையும் 21-19 என கைப்பற்றினார். 

இதன்மூலம் 21-19, 21-19 என்ற நேர் செட்களில் சாய்னா நேவால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முன்னதாக நேற்றைய ஆட்டத்தில் காலியிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனைகள் சாய்னா மற்றும் PV சிந்து மோதினர். இந்த ஆட்டத்தில் வெற்றிப்பெற்ற சாய்னா இன்றை அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News