4_வது ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி பெற 335 ரன்கள் இலக்கு

Last Updated : Sep 28, 2017, 05:05 PM IST
4_வது ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி பெற 335 ரன்கள் இலக்கு  title=

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆசி., முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 231 ரன்னுக்கு தான் முதல் விக்கெட்டை இழந்தது. ஆரோன் பிஞ்ச் 94(96) மற்றும் டேவிட் வார்னர் 124(119) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். பின்னர் வந்த ஸ்மித் 3 ரன்னுக்கு அவுட் ஆனார். டிராவிஸ் 29(38) மற்றும் பீட்டர் ஹான்சாம்கோப் 43(30) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். மார்கஸ் ஸ்ட்னினிஸ் 15(9) மத்தேயு வேட்3(3) அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 335 ரன்கள் தேவை.

இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், கேதர் ஜாதவ் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

முன்னதாக நடைப்பெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த நிலையில் இந்தியா ஒருநாள் தொடரினை கைப்பற்றியது. இன்னிநிலையில் இன்றைய போட்டி ஆஸ்திரேலியாவின் ஆருதல் முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News