IND vs PAK: பழி தீர்க்குமா இந்தியா... 160 ரன்கள் இலக்கு!

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்தது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 23, 2022, 04:02 PM IST
  • ஷான் மசூத், இஃப்திகார் அகமது ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
  • அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
IND vs PAK: பழி தீர்க்குமா இந்தியா... 160 ரன்கள் இலக்கு! title=

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நேற்று தொடங்கின. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். குறிப்பாக, இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என 6 பௌலர்கள் உடன் களமிறங்கியது. 

இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் முதல் ஓவரில் 1 ரன்னை மட்டும் கொடுத்த நிலையில், அடுத்த ஓவரில் பாபர் அசாமை டக்-அவுட்டில் வெளியேற்றி அர்ஷ்தீப் சிங் மிரட்டலான தொடக்கத்தை அளித்தார். அதேபோல், அவர் வீசிய அடுத்த ஓவரில் முகமது ரிஸ்வான் 4 ரன்களில் வெளியேறினார். 

மேலும் படிக்க | IND vs PAK போட்டியை ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?

இதன்மூலம், பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்களை எடுத்தது. இதன்பின்னர், ஷான் மசூத், இஃப்திகார் அகமது ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தனர். 

இந்த ஜோடி 76 ரன்களை குவித்தது. குறிப்பாக, அக்சர் படேல் வீசிய 12ஆவது ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு இஃப்திகார் அகமது மிரட்டினார். இருப்பினும், அதற்கடுத்த ஓவரில் ஷமியின் பந்துவீச்சில் இஃப்திகார் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 34 பந்துகளில் 51  ரன்களை குவித்தார். 

இதன்பின்னர், ஹர்திக் பாண்டியா வீசிய 14ஆவது ஓவரில், ஷதாப் கான் 5 ரன்களிலும், ஹைதர் அலி 2 ரன்களிலும் சூர்யகுமார் யாதவிடம் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர். 

அடுத்து, முகமது நவாஸ் 9 ரன்களில் ஹர்திக் பந்துவீச்சிலும், ஆசிப் அலி 2 ரன்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சிலும் நடையைக்கட்டினர். 

மறுமுனையில், மசூத் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். அர்ஷ்தீப் வீசிய 19ஆவது ஓவரில் தலா 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து ஷாகீன் அஃப்ரிடி அதிரடி காட்டினார். 

இருப்பினும் அவர் கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து 16 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில்  அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் தரப்பில் ஷான் மசூத் 52 ரன்களுடனும், ஹரீஷ் ராவுஃப் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

அடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கேஎல் ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 4 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினர். தற்போது, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி களத்தில் உள்ளனர். 

மேலும் படிக்க | T20 World Cup: மேட்சுக்கு முன்னால் செக்ஸ் வச்சிக்கோங்க - வைரலாகும் மருத்துவரின் அறிவுரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News