இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்த ஹைப் எங்கள் கட்டுப்பாட்டில் கிடையாது: கோலி

Last Updated : May 25, 2017, 10:28 AM IST
இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்த ஹைப் எங்கள் கட்டுப்பாட்டில் கிடையாது: கோலி title=

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் ஜூன் 1-ம் தேதி துடங்கி 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. 

முன்னதாக இப்போட்டி குறித்து விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது:-

வலுவான அணிகள் இருந்தால் மட்டுமே போட்டி அதிகமாக இருக்கும். தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணிக்கு வலுவான இரு துண்கள் போன்றவர்கள். 

பாகிஸ்தானுடனான போட்டி குறித்து எந்த அழுத்தமும் எங்களுக்கு கிடையாது. கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையில், மைதானத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களை கட்டுப்படுத்த எங்களால் முடியாது. பாகிஸ்தானுடனான போட்டி முக்கியமான போட்டி என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

இந்தியா-பாக்கிஸ்தான் போட்டி தொடர்பான ஹைப் மற்றும் சூழல் எங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால், எங்களைப் பொருத்தவரை பிற அணிகளுடனான போட்டியைப் போன்றே பாகிஸ்தானுடனான போட்டியையும் பார்க்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.b

Trending News