அது நடந்திருந்தால் நிச்சயம் ஓய்வு பெற்றிருப்பேன் - அஷ்வின்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்திருந்தால் நிச்சயம் ஓய்வு பெற்றிருப்பேன் என அஷ்வின் தெரிவித்துள்ளார்  

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 29, 2022, 11:06 AM IST
  • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி
  • விராட் கோலி அதிரடியாக விளையாடினார்
  • அஷ்வின் புத்திசாலித்தனமாக விளையாடினார்
 அது நடந்திருந்தால் நிச்சயம் ஓய்வு பெற்றிருப்பேன் - அஷ்வின் title=

டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில், தன் முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா எதிர்கொண்டது.அப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  குறிப்பாக, கடைசி ஓவரின் கடைசி பந்து வரை இரு அணிகளுக்கும் பதற்றம் நிலவியது. 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது நவாஸ் வீச விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் களத்தில் இருந்தனர். 

முதல் பந்தில் பாண்டியா அவுட்டாக நான்காவது பந்தில் மட்டும் மொத்தம் 10 ரன்கள் எடுக்கப்பட்டது (நோ பாலில் சிக்ஸ், ஒரு வைட், 3 ரன்கள் பைஸ்). பின்னர், 5ஆவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். 

இதனால், 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட களத்திற்கு அஷ்வின் வந்தார். தினேஷ் கார்த்திக் அவுட்டான பந்தே லெக்-ஸ்ட்ம்பிற்கு வெளியேதான் சென்றது, ஆனால், தினேஷ் கார்த்திக் அடிக்க முற்பட பந்து காலில் பட்டு கீப்பரிடம் சென்றது. இதை அஷ்வின் கவனித்துள்ளார். அரவுண்ட் தி விக்கெட் முறையில் இடதுகை பந்துவீச்சாளரான முகமது நவாஸ், வலதுகை பேட்டர் அஷ்வினுக்கு லெக் திசையில் போட்டார். அப்போது, அஷ்வின் லெக் ஸ்ட்ம்பை சரியாக மறைத்து நின்று வைடை பெற்றுக்கொண்டார். அஷ்வினின் இந்த செயல் பலரிடம் பாராட்டை பெற்றுள்ளது. குறிப்பாக விராட் கோலி அஷ்வினை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

Ashwin

இந்நிலையில் அந்தப் போட்டி குறித்து அஷ்வின் அளித்த பேட்டி ஒன்றில்,”முகமது நவாஸ் வீசிய அந்த ஒரு பந்து டர்ன் ஆகாமல் பேடில் பட்டு எல்.பி.டபள்யூ ஆகியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என ஒரு ரசிகர் என்னிடம் கேட்டார். அதற்கு என்னுடைய பதில் ஓய்வு அறிவிப்புதான். நேராக ஓய்வு அறைக்கு சென்றிருப்பேன். உடனடியாக செல்போனை எடுத்து இத்தனை ஆண்டுகள் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி, சிறப்பான கிரிக்கெட் பயணம் என ட்வீட் போட்டு ஓய்வு பெற்றிருப்பேன்” என கூறினார்.

மேலும் படிக்க | இந்திய அணியின் குறைகளை சுட்டிக்காட்டும் கபில்தேவ்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News