MS தோனிக்குள் ஒரு ஆக்ரோஷமான வீரன் ஒளிந்திருக்கிறான்... ரெய்னா புகழாரம்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனியின் உள் தற்போதும் ஒரு ஆக்ரோஷமான மட்டையாளர் இருப்பதாக சுரேஷ் ரெய்னா புழந்துள்ளார்...

Last Updated : Apr 15, 2020, 10:03 AM IST
MS தோனிக்குள் ஒரு ஆக்ரோஷமான வீரன் ஒளிந்திருக்கிறான்... ரெய்னா புகழாரம்... title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனியின் உள் தற்போதும் ஒரு ஆக்ரோஷமான மட்டையாளர் இருப்பதாக சுரேஷ் ரெய்னா புழந்துள்ளார்...

கொரோனா வைரஸ் பரவுவதால் திடீரென நிறுத்தப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முகாமின் போது மகேந்திர சிங் தோனி தனது பேட்டிங் பாணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் மும்முரமாக இருந்ததாக இந்தியாவின் முன்னாள் மத்திய வரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் முழு அடைப்பு வரும் மே 3 வரை நீட்டிக்கப்பட்டதன் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 ரத்து செய்யப்பட்டால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எதிர்காலம் என்னவாகும் என யூகங்கள் பரவி வருகின்றன. ஆனால் தோனியின் பேட்டிங் திறமை முன்பை போலவே இருப்பதாவும், அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை ரசிகர்கள் மீண்டும் பார்க்கலாம் எனவும் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Read | புது உத்வேகத்துடன் இந்திய அணிக்கு திரும்புகிறார் ரெய்னா!

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வில் கூறுகையில்., "அவர் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். கிரிக்கெட் இன்னும் அவரிடம் உள்ளது. அவர் புதுமையானவர். நாங்கள் பயிற்சி விளையாட்டுகளை விளையாடினோம், அந்த சிக்ஸர்கள் முன்பை போலவே பெரியவை. மாலையில் மூன்று மணி நேரம் பேட்டிங், அதுவும் சென்னை வெப்பம் எளிதானது அல்ல நாங்கள் அதைச் செய்தோம் (முகாமின் போது). நீங்கள் என்னிடம் கேட்டால், மஹி பாய் அற்புதமாக பேட்டிங் செய்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

"அவரது உடல் வயதான அறிகுறிகளைக் காட்டவில்லை. அவர் வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தார், வேறு ஏதாவது செய்ய முயற்சித்தார், வித்தியாசமான, புதியது. அவரைப் பார்க்கும்போது மக்கள் அதனை அறிந்து கொள்வார்கள்" என்று ரெய்னா மேலும் கூறினார்.

தோனியின் தலைமையில் 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியில் ரெய்னா ஒரு முக்கிய அங்கமாக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தனது சொந்த எதிர்காலம் குறித்து பேசிய ரெய்னா, அக்டோபரில் நடைபெறவிருந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக டி20 அணியில் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 33 வயதான ரெய்னா, 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அவர் ஏன் தேசியத் தரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதற்கு எந்தவொரு உறுதியான காரணத்தையும் தெரிவிக்கத் தவறியதற்காக தேர்வாளர்களைத் தாக்கினார்.

Read | INDVsBAN, T-20 match: 17 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

"நான் 14-15 ஆண்டுகளாக விளையாடியுள்ளேன். மஹி பாய் மற்றும் தாதா (சவுரவ் கங்குலி) .. அவர்கள் எப்போதும் என்னிடம் என்ன தவறு உள்ளது என்று என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். விராட் (கோஹ்லி) அவர்களும் அதை தான் செய்கிறார்கள், ஆனால் தேர்வாளர்கள் எல்லா நேரத்திலும் அவ்வாறு இருப்பது இல்லை. அவர்கள் மூத்த வீரர்களை கையாளும் போது அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பந்தையும் ரெய்னா பாராட்டியதோடு, "ரிஷாப் பந்த் மிகவும் திறமையானவர். யாராவது ஒருவர் படிப்படியாக அவரை வழிநடத்த வேண்டும். நான் விளையாடும்போது, ​​யுவி (யுவராஜ் சிங்) பாய் என்னை வழி நடத்தினார். தவறுகளைச் சுட்டிக்காட்டினார். அதேப்போல் ரிஷாப் ஒருவரால் ஆதரிக்கப்பட வேண்டும். அவருக்கு வெளிநாட்டில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்." எனவும் இந்த அமர்வில் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

Trending News