வரும் 7 நாட்களில் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிராசிக்கும்

Angarak Yog impact on Zodiac: ஜோதிடத்தில் செவ்வாய் மற்றும் ராகு கிரகங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. உங்கள் வாழ்க்கையில் செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கையின் தாக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்-

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 3, 2022, 10:06 AM IST
  • ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை
  • இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிராசிக்கும்
  • வரும் 7 நாட்களில் அதிர்ஷ்டம், பண பலன்கள்
வரும் 7 நாட்களில் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிராசிக்கும் title=

அங்காரக யோகம், ராசிகளில் இதன் தாக்கம்: செவ்வாய் கிரகம் மேஷ ராசியிலும் ராகுவும் செவ்வாயும் இணைவதால் அங்காரக யோகம் உருவாகி வருகிறது. அந்தவகையில் ஆகஸ்ட் 10 வரை மேஷ ராசியில் அங்காரக யோகம் இருக்கும். இந்த யோகத்தின் பலன் சில ராசிகளுக்கு அசுபமாகவும், சில ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் இருக்கும். எனவே வருகிற ஆகஸ்ட் 10 வரை எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை இங்கே விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

அங்காரக யோகம் என்றால் என்ன
அங்காரக யோகம் என்பது ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் ராகுவால் உருவாகும் ஒரு ஜோதிட யோகமாகும். வேத ஜோதிடத்தில் உள்ள அதன் வரையறையின்படி ஒரு ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் ஒரே வீட்டில் இருந்தால், அந்த இடம் காரணமாகவோ அல்லது அம்சம் காரணமாகவோ, அங்காரக யோகம் உருவாகிறது. 

மேலும் படிக்க |  Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 10 வரை எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும்.

மேஷம்- மேஷ ராசிக்காரர்களின் மரியாதை உயரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். பண வரவுகள் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இது நல்ல நேரம் ஆகும். எதிர்காலத்தில் முதலீட்டின் பலனைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

மிதுனம்- ஆகஸ்ட் 10 வரையிலான காலம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் கௌரவம் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு சாத்தியமாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்- கடக ராசிக்காரர்களின் வேலை பாங்கு மேம்படும். கௌரவம் உயரும். இந்த காலகட்டத்தில் தந்தையின் உதவியால் பண வரவு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். சமய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் வரப்பிரசாதம் என்றே கூறலாம். இந்த காலகட்டத்தில் விரும்பிய பலன்கள் கிடைக்கும். வேலை மாற்றம் சாத்தியமாகும். கௌரவம் உயரும். மதப் பயணத்திற்கான யோகம் உண்டாகும். வருமான அதிகரிப்பு சாத்தியமாகும். 

தனுசு -தனுசு ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாகப் பணம் சிக்கியிருக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் தொடரும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். திடீர் பண ஆதாயம் கூடும். கட்டிடம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம்.

மேலும் படிக்க |  நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News