ஆகஸ்ட் 10 வரை மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த 4 ராசிக்காரர்களுக்கு அலர்ட்

Mangal Gochar 2022: ஜோதிடத்தில் செவ்வாய்க்கு தனி இடம் உண்டு. செவ்வாய் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் தளபதி என்று கூறப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 29, 2022, 05:59 AM IST
  • எந்தெந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்
  • இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்
  • ஜூன் 27ம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றினார்
ஆகஸ்ட் 10 வரை மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த 4 ராசிக்காரர்களுக்கு அலர்ட் title=

ஜூன் 27ம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றினார். அதன்படி ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செவ்வாய் கிரகம் மேஷ ராசியில் இருக்கும். இந்த நேரத்தில் ராகு மேஷ ராசியிலும் இருப்பார். ராகுவும் செவ்வாயும் ஒரே ராசியில் இருப்பது ஜோதிட சாஸ்திரத்தில் அசுபமாக கருதப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 10 வரை எந்தெந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-

ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் எந்த முடிவையும் எடுக்கும் முன் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். செவ்வாய் உங்கள் ராசியிலிருந்து 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் உடல்நிலையில் சிறிது பாதிப்பு ஏற்படலாம். எனவே, உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

மேலும் படிக்க | ஜூலை மாத கிரக மாற்றங்களால் குபேரனின் அருளை முழுமையாக பெறப்போகும் சில ராசிகள் 

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் ஏற்படலாம். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருப்பது நன்மை ஏற்படுத்தி தரும். செவ்வாய் உங்கள் ராசியிலிருந்து 8ஆம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இதனால் செவ்வாய்ப் பெயர்ச்சி உங்கள் ஆரோக்கியத்தையும் வருமானத்தையும் பாதிக்கும்.

துலாம் - செவ்வாய் உங்கள் ராசியிலிருந்து ஏழாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் குழப்பமான  முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். கூட்டாண்மை வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் வேலை, வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நலம் பாதிக்கப்படும். விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்

மிதுனம்- பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள். இந்த நேரம் கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். தொழிலுக்கு ஏற்ற காலம் அமையும்.

கடகம்- ஆரோக்கியம் மேம்படும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வேலையைத் தொடங்க மிகவும் சாதகமான நேரம். வேலையில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கௌரவம், அந்தஸ்த்து உயரும் வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்- செவ்வாயின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் முன்னேற்றம் பெறலாம். உங்களுக்கும் மரியாதை கிடைக்கும். உங்கள் இடம் மாற்றப்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் ராசிகள் இவை: உங்க ராசி என்ன 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News