குரு வக்ர பெயர்ச்சி: 3 நாட்களுக்கு பின் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்

Jupiter Retrograde: தற்போது நிகழவிருக்கும் குருவின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிகள் அதிகப்படியான நன்மையை அனுபவிப்பார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 26, 2022, 11:29 AM IST
  • மூன்று நாட்களுக்குப் பிறகு குரு வக்ர நிலையில் பெயர்ச்சியாவார்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாழனின் வக்ர பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும்.
  • இந்த ராசிக்காரர்கள் பல ஆண்டுகளாக போட்டுவைத்த திட்டங்கள் இப்போது நிறைவேறும்.
குரு வக்ர பெயர்ச்சி: 3 நாட்களுக்கு பின் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம் title=

குரு வக்ர பெயர்ச்சி: மூன்று நாட்களுக்குப் பிறகு குரு வக்ர நிலையில் பெயர்ச்சியாவார், அதாவது குரு பகவான் பிற்போக்காக நகர்வார். ஜூலை 29 அன்று, வியாழன் மீனத்தில் வக்ர பெயர்ச்சி கொள்வார். நேரடி இயக்கமும் பிற்போக்கு இயக்கமும் கிரகங்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இவை பல்வேறு ராசிகளில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். வியாழன் ஏப்ரல் மாதம் மீன ராசியில் நுழைந்தார். இப்போது அவர் அதே ராசியில் வக்ரமாவார். ஜாதகத்தில் வியாழன் கிரகம் நல்ல இடத்தில் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு அதிர்ஷ்டம் அதிகம் என்பது ஐதீகம். குருவின் சுப பார்வையால் பல்வேறு ராசிக்காரர்களும் பலன் அடைகிறார்கள். பலர் தோல்வியை தழுவும் பல துறைகளிலும் இவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தற்போது நிகழவிருக்கும் குருவின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிகள் அதிகப்படியான நன்மையை அனுபவிப்பார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாழனின் வக்ர பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் பல ஆண்டுகளாக போட்டுவைத்த திட்டங்கள் இப்போது நிறைவேறும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் சில லாபகரமான ஒப்பந்தங்களை மெற்கொள்வார்கள். எனினும், இந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முன் சற்று யோசித்து செயல்படுவது நல்லதாகும். 

மேலும் படிக்க | Weekly Horoscope: குபேர அருளால் இந்த வாரம் இந்த ராசிகளுக்கு பண மழை 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கும் நேரம் மிகவும் நல்லதாக உள்ளது. இந்த ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வார்கள். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் வெற்றிகள் வந்து குவியும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். 

கன்னி:

குரு பகவான் கன்னி ராசிக்கு மிகவும் சிறப்பான நேரத்தை கொண்டு வருகிறார். இந்த ராசிக்காரர்களுக்கு தடைபட்ட வேலைகள் அனைத்தும் இந்த காலத்தில் முடிவடையும். பண நெருக்கடி இருந்தவர்களுக்கு அந்த பிரச்சனையிலிருந்து இப்போது விடிவுகாலம் பிறக்கும். 

விருச்சிகம்:

நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு இருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி அனுகூலமான கால அமைப்பை கொண்டு வரும். இது தவிர புதிய வேலைகளில் கவனம் செலுத்தி லாபம் ஈட்டுவீர்கள். சொந்த வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் அதிகப்படியான லாபம் காண்பீர்கள்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன் பின்னோக்கி நகர்வது நல்லதாக அமையும். கும்ப ராசிக்காரர்களுக்கு பணியிடத்திலும் வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தாலும் ஆதாயம் அடைவீர்கள். இந்த கலாத்தில் தான தர்மங்களை விடாமல் செய்வது நல்லது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | வீட்டில் சனீஸ்வரரை வணங்குபவரா? ஜாக்கிரதை! இது சனியை உக்ரமாக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News