வயதான பாட்டியை கட்டியணைத்து ஆறுதல் கூறும் பஞ்சாப் காவலர் - WATCH

பஞ்சாப் காவலர் ஒருவர் வயதான பெண்மணியை கட்டியானத்து ஆறுதல் கூறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது!!

Last Updated : Nov 26, 2019, 05:03 PM IST
வயதான பாட்டியை கட்டியணைத்து ஆறுதல் கூறும் பஞ்சாப் காவலர் - WATCH title=

பஞ்சாப் காவலர் ஒருவர் வயதான பெண்மணியை கட்டியானத்து ஆறுதல் கூறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது!!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், வயதான பெண்மணி ஒருவரை கட்டியானத்து ஆறுதல் கூறும் காவலர் ஒருவரின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

ஒரு வயதான பெண்ணை ஆறுதல்படுத்தும் ஒரு பஞ்சாப் காவலரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இணைய வாசிகளின் மனதை கவர்ந்துள்ளது. சுமார், 56 விநாடி கிளிப்பை இந்திய போலீஸ் அறக்கட்டளை தனது அதிகார்ப்பூர்வ ட்விட்டர் கணக்கிள் பகிர்ந்துள்ளது. 

மலேசியாவில் தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து வயதான பெண்மணி காவலரிடம் விவரித்தார். காவல்துறை அதிகாரி அவள் கண்ணீரைத் துடைப்பது மட்டுமல்லாமல், ஒரு அரவணைப்புடன் அவளைத் தழுவினார். அவளுடைய ஆத்மாவை ஆறுதல் பாடுதுவதற்காக வயதான மகனிடம் தன் மகன் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.

"இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் காவல்துறைக்கு இறுதி முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்த வயதான குடிமகளின் கண்ணீரை அவர் கேட்டுத் துடைக்கும் உணர்திறன் மற்றும் பச்சாத்தாபத்தின் ஆழமான உணர்வைப் பாருங்கள்" என்று இந்திய போலீஸ் அறக்கட்டளை தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவை பாருங்கள்: 

ஆரம்பத்தில், வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களிலேயே 25,000 பார்வையாளர்களை எட்டியதுடன். சுமார், 2,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. எனவே, காவல்துறையின் சைகையால் இணையம் மகிழ்ச்சியடைகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. கருத்துகள் பிரிவில், நெட்டிசன்கள் காவலரைப் பாராட்டி எழுதினர் மற்றும் அவரது மனதைக் கவரும் சைகைக்கு அவரைப் பாராட்டினர். இந்த வீடியோவிற்க்கு பலரும் தங்களின் பாராட்டுகளையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். 

 

Trending News