Viral Video: மகளின் கால்களை பாலில் கழுவி அதை குடித்த பெற்றோர்

இந்த வைரலான வீடியோவில், பெற்றோர்கள் தங்கள் மகளின் கால்களை தண்ணீர் மற்றும் பாலில் கழுவி அதை குடிக்கின்றனர்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 27, 2022, 10:51 AM IST
  • மகளின் கால்களை பாலிலும் தண்ணீரிலும் கழுவும் பெற்றோர்
  • மகளின் பாதங்களை வணங்கி நீர் அருந்திய பெற்றோர்
  • மனதை தொடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
Viral Video: மகளின் கால்களை பாலில் கழுவி அதை குடித்த பெற்றோர் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு பெற்றோர்களின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இங்கு பெற்றோருக்கும் மகளுக்கும் இடையே உள்ள மனதை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரலான வீடியோவில், பெற்றோர்கள் தங்கள் மகளின் கால்களை தண்ணீர் மற்றும் பாலில் கழுவி அதை குடிக்கிறார்கள். ஆனால் சமூக ஊடக பயனர்கள் இது மிகவும் வியத்தகு என்று விமர்சித்தனர். அந்த வீடியோவில், தந்தையும் தாயும் தங்கள் மகளின் கால்களை தண்ணீரிலும் பாலிலும் கழுவுகிறார்கள். அதன்பின், பெற்றோர் அந்த தண்ணீர் மற்றும் பாலை குடித்தனர். இந்த 2.20 நிமிட வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். மேலும் பலர் என்ன பாரம்பரியம்..? இதை ஏன் செய்ய வேண்டும்..? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் தங்கள் மகள் வீட்டை விட்டு வெளியேற உள்ளதால் இவ்வாறு செய்ததாக கருத்து தெரிவித்தனர். 

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

இந்த வீடியோவில், தந்தை தனது மகளின் கால்களை கழுவி, டவலால் துடைத்துள்ளார். முதலில் கால்களைக் கழுவாமல் தண்ணீரைக் குடித்துவிட்டு மனைவிக்குக் கொடுக்கிறார். இந்த நேரத்தில், மகளின் தலையை தடவிய தாய் மகிழ்ச்சியுடன் அந்த தண்ணீரை குடிக்கிறார். அந்த தண்ணீரை குடிக்க வேண்டாம் என மகள் பெற்றோரிடம் கூறுவதையும் இந்த வீடியோவில் நாம் காணலாம்.

பின்னர் பெற்றோர்கள் மகளின் கால்களை குங்குமம் கலந்த தண்ணீரில் போட்டு வெள்ளை துணியில் நடக்க வைக்கிறார்கள். அதனால் அவள் கால்தடங்கள் அதில் பதிந்துள்ளன. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் 'உணர்ச்சிமிக்க தருணம்' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். மகளை கணவர் வீட்டிற்கு அனுப்பும் போது பெற்றோர்கள் விடைபெறும் நிகழ்ச்சியை வழங்கியதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மனதைத் தொடும் நிலை இது. அந்த பெற்றோர்கள் தங்கள் அன்பு மகள் மீது வைத்திருக்கும் அன்பு விலைமதிப்பற்றது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒரு விசித்திரமான பாரம்பரியம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.  இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இந்த காட்சியை அங்கு இருந்த யாரோ ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார், அத்துடன் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News