ஆளவிடு தாயே!! கெஞ்சிய பாம்பு, வெச்சி செஞ்ச சிறுமி: இணையத்தை மிரட்டிய வைரல் வீடியோ

Viral Video: சிறுமியின் இந்த செயலை பார்த்து பலரும் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் பலர் இதில் உள்ள ஆபத்தை பற்றியும் கூறி வருகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 18, 2024, 01:30 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @BapuDaLadla என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
ஆளவிடு தாயே!! கெஞ்சிய பாம்பு, வெச்சி செஞ்ச சிறுமி: இணையத்தை மிரட்டிய வைரல் வீடியோ title=

Viral Video: பாம்பு என்றாலே அனைவரையும் பீதி பற்றிக்கொள்ளும். பல வித விலங்குகள் இருந்தாலும், பாம்பின் மீதான அச்சமும், ஆர்வமும் மனிதர்களுக்கு என்றுமே குறைந்தது இல்லை. பாம்பு பெரிய கில்லாடிகளையும் தன் முன் மண்டியிட வைத்துவிடுகிறது. ஆனால், சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு வீடியோ இதற்கு நேர்மாறாக உள்ளது. இதில் ஒரு சிறுமி பாம்பை பாடாய் படுத்தி அதை தன் வீட்டை விட்டு வெளியேற்றுவதை காண முடிகின்றது.

இந்த பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது, பெண்ணில் தைரியமும் அப்பாவித்தனமும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. நீளமான பாம்பு ஒன்று ஒரு வீட்டினுள் நுழைந்து சுவருக்கு அருகில் ஒளிந்து கொள்ள முயற்சிப்பதை இந்த காணொளியில் காண முடிகின்றது. அந்த வீட்டில் இருக்கும் சிறுமி எந்த பயமும் இல்லாமல் பாம்பை பின்னால் இருந்து பிடித்து இழுக்க ஆரம்பிக்கிறார். இது தினம் தினம் நடக்கும் ஒரு சாதாரண சம்பவம் போல அப்பாவியாக தன் அம்மாவை அழைக்கிறார்.

பெரிய பாம்பை பந்தாடிய சிறுமி

இந்த வீடியோவில் அந்த பெண்ணின் துணிச்சலை பார்த்தால் மிகவும் திகைப்பாக இருக்கின்றது. ஏனென்றால் இவ்வளவு சிறிய வயதில் இதுபோன்ற தைரியமும் பயமின்மையும் அரிதாகவே காணப்படுகின்றன. பொதுவாக பாம்பை கண்டாலே பெரியவர்கள் கூட பயந்து ஓடி விடுவார்கள். ஆனால் இந்த பெண் பாம்பை எந்த பயமும் இல்லாமல் பொம்மை போல பிடித்து இழுத்து கொண்டிருக்கிறார். நீளமான பாம்பு தன் உயிரைக் காப்பாற்ற பெண்ணின் பிடியிலிருந்து தப்பிக்க முயல்வதையும், சிறுமி அதை உறுதியாகப் பிடித்து இழுப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

பாம்பையே பதற வைத்த பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:

இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் மக்கள் பொதுவாக அச்சமுற்று பாம்பு பிடிக்கும் நபர்களை அழைப்பார்கள். ஆனால், பயம் என்றால் என்ன என்றே அறியாத அந்த சிறுமி தானே பாம்பை பிடித்து வீட்டி விட்டு வெளியே வீசுகிறார். சிறுமியின் அப்பாவித்தனமும் பயமின்மையும் இந்த சம்பவத்தை வைரலாக்கியது. சிறுமியின் இந்த செயலை பார்த்து பலரும் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் பலர் இதில் உள்ள ஆபத்தை பற்றியும் கூறி வருகிறார்கள். 

மேலும் படிக்க | சிறுவனின் உடலை வில்லாக வளைத்து ஸ்கிப்பிங் ஆடும் ஆப்பிரிக்க இளைஞர்கள் - வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @BapuDaLadla என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

‘இத்தகைய பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை என்பதில் சந்தேகமில்லை. குழந்தைகளை அவற்றிலிருந்து விலக்கி வைப்பது மிகவும் அவசியம்.’ என ஒரு பயனர் எழுதியுள்ளார்.  ‘வன விலங்குகளிடம் இருந்து குழந்தைகளை விலக்கி, இதுபோன்ற ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஒருவர் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)

மேலும் படிக்க | Viral Video: பிளாட் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஷூவை திருடும் ஸ்விக்கி டெலிவரி பாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News