வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற தந்தையை தடுக்கும் செல்ல மகள்..!

அருணாச்சலப்பிரதேசத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற தந்தையை அவரது குட்டி மகள் தடுத்து நிறுத்தும் க்யூட்டான வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது!!

Last Updated : Apr 2, 2020, 12:58 PM IST
வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற தந்தையை தடுக்கும் செல்ல மகள்..! title=

அருணாச்சலப்பிரதேசத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற தந்தையை அவரது குட்டி மகள் தடுத்து நிறுத்தும் க்யூட்டான வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது!!

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இதியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற தந்தையை அவரது குட்டி மகள் தடுத்து நிறுத்தும் க்யூட்டான வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. 

அருணாச்சலப்பிரதேசத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல தாயாராக இருக்கிறார். ஆனால், அவரது செல்லக்குழந்தை கதவினை மூடிவிட்டு அவரை தடுத்து நிறுத்தியுள்ளது. 'பிரதமர் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று கூறி இருக்கிறார். வீட்டிலேயே இருங்கள்' என்று மழலைக் கொஞ்சும் குரலில் அந்த சிறுமி தனது தந்தையை எச்சரிக்கிறாள்.

சிறுமி பேசும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு ஷேர் செய்துள்ளார். சிறுமியின் முகபாவத்தையும் அவர் வெகுவாக வியந்து என கூறியுள்ளார். 

Trending News