மது பாட்டில்களை Home Delivery செய்வதற்கான ப்ரத்தியேக வலைதளம் அறிமுகம்...

கொரோனா வைரஸ் முழு அடைப்பின் போது மது பான கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கும் முயற்சியில், மது பாட்டில்களை Home Delivery செய்வதற்கான ப்ரத்தியேக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது சந்தீஸ்கர் அரசு!

Last Updated : May 5, 2020, 03:22 PM IST
மது பாட்டில்களை Home Delivery செய்வதற்கான ப்ரத்தியேக வலைதளம் அறிமுகம்... title=

கொரோனா வைரஸ் முழு அடைப்பின் போது மது பான கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கும் முயற்சியில், மது பாட்டில்களை Home Delivery செய்வதற்கான ப்ரத்தியேக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது சந்தீஸ்கர் அரசு!

தகவல்கள்படி இந்த சேவை பச்சை மண்டலங்களுக்கு மட்டுமே பொருந்தும். சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மது பாட்டில்கள் ஹோம் டெலிவிரி சேவை கிடைக்காது. மாநிலத்தில் மது விற்பனையை கட்டுப்படுத்தும் CSMCL (சத்தீஸ்கர் மாநில சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட்) என்பதன் பெயரால் இந்த போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது என்று மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
முழு அடைப்பின் போது சில தடைகளை எளிதாக்குவதற்கான மத்திய அரசின் முடிவைத் தொடர்ந்து, மார்ச் 23 முதல் மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள், கோவிட் -19 கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் வணிக வளாகங்களைத் தவிர, திங்கள்கிழமை முதல் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன.

ஆனால், மாநில தலைநகர் ராய்ப்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு வெளியே ஏராளமான மக்கள் உடல் ரீதியான தொலைதூர விதிமுறைகளை மீறி வரிசையில் நின்று மக்கள் அச்சத்தினை அதிகரித்தனர். "மதுபானங்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது, இதனால் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதை தடுக்க முடியும்" என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CSMCL வலைத்தளம் அல்லது பிளே ஸ்டோரில் கிடைக்கும் அதன் மொபைல் செயலி மூலம் மக்கள் நேரடியாக தங்கள் ஆர்டர்களை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பசுமை மண்டலங்களாக வகைப்படுத்தப்படாத ராய்ப்பூர் மற்றும் கோர்பா மாவட்டங்களில் வீட்டு விநியோக வசதி கிடைக்காது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

ஆர்டரை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக மக்கள் தங்கள் மொபைல் எண், ஆதார் எண் மற்றும் முகவரியை பதிவு செய்ய வேண்டும், மற்றும் இது OTP (ஒரு முறை கடவுச்சொல்) மூலம் உறுதிப்படுத்தப்படும். ஒரு வாடிக்கையாளர் வீட்டு விநியோகத்திற்காக ஒரு நேரத்தில் 5,000 மில்லி மதுபானம் வரை ஆர்டர் செய்யலாம், விநியோகத்திற்கான கட்டணம் ரூ .120 வசூளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, வீட்டுக்கு மதுபானம் வழங்குவதற்கான மாநில அரசுகளின் முடிவை "வெட்கக்கேடானது" என்று கூறி, அதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது.

ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், மதுபானத்தை தடை செய்வதாக உறுதியளித்த பின்னர், இப்போது வீட்டில் மதுபானங்களை வழங்கி வருகிறது. இது மிகவும் வெட்கக்கேடான முடிவு என்று மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் தரம்லால் கௌசிக் விமர்சித்துள்ளார்.

Trending News