‘தேங்க்ஸ் ப்ரோ’: நன்றி சொல்லும் குரங்குகள்... பாராட்டும் நெட்டிசன்ஸ்: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

Animal Viral Video: சமீபத்தில் நெஞ்சை உருகச்செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம் மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 25, 2023, 11:00 AM IST
  • இந்த வீடியோவை பிரபல புகைப்படக் கலைஞர் viralbhayani தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
  • இது ஜெய் பஜ்ரங் பலி என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது.
  • இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
‘தேங்க்ஸ் ப்ரோ’: நன்றி சொல்லும் குரங்குகள்... பாராட்டும் நெட்டிசன்ஸ்: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 

உலகில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் சக மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் அன்புடன் நடந்துகொள்வது மிக முக்கியமாகும். விலங்குகளும் மனிதர்களும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இவை பல சமயம் நம்மை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் இருக்கின்றன. 

சமீபத்திலும் நெஞ்சை உருகச்செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம் மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது. தற்போது பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த காலத்தில் தண்ணீருக்கான தேவை அனைவருக்கும் இருக்கின்றது. மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் என அனைவருக்கும் தாகத்தை போக்கிக்கொள்ள தண்ணீர் தேவைப்படுகின்றது. ஆனால் மனிதர்களை போல விலங்குகள் மற்றும் பறவைகளால் தண்ணீரை அத்தனை எளிதாக அணுக முடியாது. அவற்றின் அருகில் இயற்கையான தன்ணீர் வளங்கள் இல்லை என்றால், அவை தண்ணீருக்காக அல்லல் படும் நிலை ஏற்படக்கூடும். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் அவற்றின் பிரச்சனையை உணர்ந்து அவற்றுக்கு உதவ முன்வருவதை பல சமயங்களில் பார்க்க முடிகின்றது. இந்த வீடியோவிலும் அப்படி ஒரு செயலைத் தான் நாம் காண்கிறோம். 

கொளுத்தும் வெயிலில் தொண்டை முற்றிலும் வறண்டுபோன போது, யாராவது வந்து இரண்டு டம்ளர் தண்ணீர் கொடுத்தால், உங்களுக்கு எவ்வளவு நிவாரணம் கிடைக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அதிலும் குறிப்பாக விலங்குகள் தண்ணீரைத் தேடி அதிகமாக அலைய வேண்டியிருப்பதால் அவற்றிடம் இப்படி ஒரு தண்ணீர் பாட்டிலை யாராவது நீட்டினால், அந்த தண்ணீர் அவற்றிக்கு அமிர்தமாகவே தெரிகின்றன. 

தற்போது வெளிவந்துள்ள வீடியோவிலும் அப்படி ஒரு காட்சியைத்தான் காண முடிகின்றது. இதைப் பார்த்தால் நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு உலகில் பஞ்சமே இல்லை என்று உங்கள் மனம் சொல்லும்.

மேலும் படிக்க  | சிங்கத்துடன் அமர்ந்து டின்னர் சாப்பிடும் பெண்ணின் வீடியோ வைரல்

குரங்குகளுக்கு தண்ணீர் கொடுத்த வள்ளல்

குட்டிகளுடன் குரங்கு ஒன்று சாலையில் அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது.  அப்போது அந்த வழியாக செல்லும் நபர் தண்ணீர் பாட்டிலுடன் விலங்கின் முன் செல்கிறார். குனிந்து பாட்டிலை குரங்கின் முன் காட்டுகிறார். குரங்கு துள்ளிக் குதித்து தண்ணீர் குடிக்கத் தொடங்குகிறது. இதற்கிடையில், மற்றொரு குரங்கு அங்கு வருகிறது. ஆனால் தண்ணீர் குடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இரு குரங்குகளும் அங்கிருந்து கிளம்ப, மூன்றாவது குரங்கு வந்து தண்ணீர் குடிக்கத் தொடங்குகிறது.

வைரலான வீடியோவை இங்கே காணலாம்:

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோவை பிரபல புகைப்படக் கலைஞர் viralbhayani தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது ஜெய் பஜ்ரங் பலி என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 12 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் ஏகப்பட்ட வியூஸ்களையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

ஒரு பயனர், ‘மிக அழகான வீடியோ.... இதை பார்த்து மனம் மகிழ்ச்ந்தது’ என எழுதியுள்ளார். ‘இன்னும் இப்படிப்பட்ட மனிதர்கள் நம் உலகில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மனதுக்கு நிம்மதியை அளிக்கின்றது’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | டால்பின் வீசிய மீனை அந்தரத்தில் அட்டகாசமாக கேட்ச் பிடித்த கடல்பறவை - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News