Flame of Victory கன்னியாகுமரிக்கு வந்தது; 1971 போர் வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்

‘வெற்றியின் சுடர்’ நாட்டின் கடைக்கோடி நகரமான கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது; 1971-ஆம் ஆண்டு போரில் பங்கேற்ற போர் வீரர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

பாகிஸ்தானுடனான 1971 ஆம் ஆண்டு போரில் இந்தியா பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்கு இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டு வரும் ’வெற்றியின் சுடர்’ (‘Flame of Victory’) கன்னியாகுமரியை வந்தடைந்தது. COVID-19 வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட சிவில் நிர்வாகத்தின் முன்னிலையில் வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Also Read | ஜூனியர் சிங்கப் பெண்களுக்கு பார்ட்டி கொடுத்து அசத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

1 /5

1971 போர் வெற்றியின் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில் (National War Memorial) அணையாமல் ஒளிரும் சுடரிலிருந்து நான்கு வெற்றி தீப்பிழம்புகள் ஏற்றப்பட்டன

2 /5

நான்கு சுடர்களும் 1971 போர்வீரர்கள் மூலமாக நான்கு திசைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.

3 /5

ஜூலை 11, ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலிக்கு அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை நிலையத்திற்கு (Naval Station INS Kattabomman) வந்து சேர்ந்தது.

4 /5

வெற்றிச்சுடர் திருநெல்வேலி மாவட்டத்திற்கும், 1971 போரின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சிப்பாய் காசிமணி மற்றும் சங்கிலி செல்லையா ஆகியோரின் வீடுகளுக்கும் கொண்டு செல்லப்படும்.  

5 /5

ஜூலை 13 புதன்கிழமையன்று தூத்துக்குடி மாவட்டம் வழியாகச் செல்லும் சுடரை இந்திய கடலோர காவல்படையினர் பெற்றுக் கொள்வார்கள். அதைத் தொடர்ந்து மதுரை செல்லும் வழியில் ஐ.என்.எஸ் பருந்து-விடம் (INS Parundu) ஒப்படைக்கப்படும்.